நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, August 25, 2024

யாழில் பஸ்களில் பிரயாணம் செய்யும் மாணவிகளுக்கு கடும் பாலியல் தொல்லை!! நடப்பது என்ன?


யாழில் பஸ்களில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு காவாலிகள் திட்டமிட்ட ரீதியில் கடும் பாலி யல் தொல்லை கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மானிப்பாயில் உள்ள பிரபல மகளீர் பாடசாலைக்கு பஸ்களில் வரும் மாணவிகளுக்கு காவாலிகள் கடும் பாலி யல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக குறித்த பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நவீன மோட்டார் சைக்கிள்களில், காதுகளில் தோடு மற்றும் தலைகளுக்கு நிறப்பூச்சுகள் போன்றவற்றை பூசி வரும் ரவுடித்தனமான காவாலிகளும் நாகரீக உடைகளில் வரும் காவாலிகளும் மாணவிகளுக்கு இவ்வாறான பாலி யல் தொல்லைகளை கொடுத்து வருகின்றார்கள்.

  மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்ட இடங்களில் விட்டுவிட்டு, பாடசாலைக்குச் செல்லும் நேரங்களைக் குறி வைத்து அரச மற்றும் தனியார பஸ்களில் ஏறும் ரவுடிகள் யாரையும் பொருட்படுத்தாது மாணவிகளுக்கு அருகில் சென்று சினிமாப்பாணியில் பாலி யல் சேட்டைகளை விட்டுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் நடவடிக்கை தொடர்பாக பஸ்களின் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மௌனமாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவிக்கின்றார்கள்.

பாடசலை செல்லும் நேரங்கள் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் இதற்காக காத்திருந்து இவர்கள் செயற்படுவதாக தெரியவருகின்றது. இதனால் குறித்த பாடசாலைக்கு பஸ்களில் செல்லும் மாணவிகள் பலர் கடும் அச்சத்தில் உறைந்துள்ளதாகவும் பாடசாலைத் தரப்பிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இருப்பினும் பாடசாலைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் மற்றும் தமது உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நேரத்தில் இக் காவாலிகளின் கொடூரச் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டப்படுமா என்ற ஏக்கம் மாணவிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இதே வேளை காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி, காரைநகர் -மானிப்பாய் – யாழ் வீதி போன்ற இடங்களால் யாழ் நகரப்பகுதிக்கு பஸ்களில் வரும் மாணவிகளுக்கும் இவ்வாறான பாலி யல் தொல்லைகளைக் காவாலிகள் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job