
A9 சாலையூடாகப் பயணிக்கும் வெளிமாவட்ட அரச பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை எனப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சிப் பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் தென்மராட்சிப் பகுதிகளிலிருந்து,
யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கே மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
யாழிலிருந்து – சாவகச்சேரி பயணிப்பதற்கு 43 ரூபாவே பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகளிடம் 45 ரூபா நடத்துனரால் வாங்கப்படுகிறது.
சில வேளைகளில் 50 ரூபாவும் வாங்கப்பட்டு மிகுதிப் பணம் கொடுக்கப்படுவதில்லை. என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னரும் 38 ரூபா பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் 40 ரூபாவே நடத்துனரால் வாங்கப்பட்டது. என்றும் குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Post a Comment