ஹைதராபாத்தில் இளம் பாடகியை அவரது கணவர் தீவைத்து எரித்து கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதா சோனியா பேகம் பஞ்சாப்பை பிறப்பிடமாக கொண்டவர். இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் குடியேறியுள்ளார்.
அங்கு சல்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி வருகிறார்.
இந்நிலையில், கால்கள் மற்றும் கைகள் பிளாஸ்டிக் பையால் கட்டப்பட்ட நிலையில், சோனியா தனது வீட்டில் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சோனியாவை அவரது கணவர்தான் கொலை செய்துள்ள தெரியவந்துள்ள நிலையில், தப்பிய ஓடிய அவரை பொலிசார் தேடி வருகின்றனர். சோனியாவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாகவும், குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கணவன் எரித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இவர்களது, 2 வயது குழந்தை அருகில் வசிப்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment