நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

சட்டவிரோத போத்தலுடன் வந்த வேன் சாரதி கைது


சட்டவிரோத கசிப்பு போத்தல்களுடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றை மடக்கிப் படித்து அதன் சாரதியைக் கைது செய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

பொரலஸ்ஸவிலிருந்து மாராவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநேரி பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் கசிப்பு போத்தல்கள் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செயற்பட்ட மாராவில பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் மறைத்து வைத்து வைக்கப்பட்டிருந்த 50 கசிப்பு போத்தல்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

குறித்த வேனைக் கைப்பற்றிய போது அதனுள் அதன் சாரதி மாத்திரமே இருந்துள்ளதாகவும், பொரலஸ்ஸ பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யுமிடத்திலிருந்து கசிப்பு போத்தல்களை கட்டுநேரி பிரதேச வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக அந்நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை கைப்பற்றப்பட்ட கசிப்பு போத்தல்களுடன் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job