பாலமுனை மண்டூர் பிரதேச வீடொன்றினுள் கொள்ளையர்கள் புகுந்து பெறுமதிவாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினம் வீட்டுரிமையாளர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த வேளையில் வீட்டின் ஜன்னல் பகுதியை உடைத்து உட்புகுந்து அங்கிருந்த நாற்பதாயிரம் ரூபா பணம் மற்றும் சமயலறையில் இருந்த பொருட்கள் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளை இட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment