50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 7, 2018

அரியாலையில் மீண்டும் ஓர் துப்பாக்கிச் சூடு!! மர்ம நபரால் பரபரப்பு..!


அரி­யாலை மணி­யந்­தோட்­டம் பகு­தி­யில் நேற்று மாலை துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

சிவில் உடை­யில் நின்­றி­ருந்த இரு­வர்,

   
       
   
  மணல் ஏற்றி வந்த உழவு இயந்­தி­ரங்­களை நோக்கி துப்­பாக்­கிச் சூட்டை நடத்­தி­யுள்­ள­னர். உழவு இயந்­தி­ரங்­க­ளு­டன் சார­தி­கள் தப்­பித்­துச் சென்­றுள்­ள­னர்.

சிவில் உடை­யில் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­வர்­கள் யார் என உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­கள் தமக்­குக் கிடைக்­க­வில்லை என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் அலு­வ­ல­கத்­தி­னர் நேற்று இரவு உத­ய­னுக்­குத் தெரி­வித்­த­னர்.

மணி­யந்­தோட்­டம் பகு­தி­யில் கடந்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 22ஆம் திகதி சிவில் உடை­யில் நின்­ற­வர்­கள், உந்­து­ரு­ளி­யில் சென்ற இளை­ஞர்­கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யி­ருந்­த­னர்.

24 வய­து­டைய டொன்­பொஸ்கோ டினே­சன் என்ற இளை­ஞன் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டி­ருந்­தான். நீண்ட விசா­ர­ணை­க­ளின் பின்­னர், சிறப்பு அதி­ர­டிப் படை­யின் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்த இரு­வர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், சிவில் உடை­யில் நின்­றி­ருந்­தோர் நேற்­றைய தின­மும் அதே பகு­தி­யில் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது.

மணி­யந்­தோட்­டப் பகு­தி­யில் கள்ள மணல் ஏற்றி வரும் செயற்­பாடு தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­வ­தாக மக்­க­ளால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

இரண்டு உழ­வி­யந்­தி­ரங்­கள் மண­லு­டன் நேற்று மாலை 5.30 மணி­ய­ள­வில் அந்­தப் பகு­தி­யால் வந்­துள்­ளன. சிவில் உடை­யில் நின்­ற­வர்­கள் உழவு இயந்­தி­ரத்தை மறித்­துள்­ள­னர்.

உழவு இயந்­தி­ரங்­களை நிறுத்­தா­மல் சார­தி­கள் செலுத்­திச் செல்­லவே, வானத்தை நோக்கி மேல் வெடி வைக்­கப்­பட்­ட­தாக அந்­தப் பகுதி மக்­கள் கூறு­கின்­ற­னர்

   
       
   
  .

இதன் பின்­னர் உழவு இயந்­தி­ரங்­களை நோக்­கி­யும் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் உழவு இயந்­தி­ரங்­க­ளு­டன் சார­தி­கள் தப்­பித்­துச் சென்­றுள்­ள­னர்.

துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­வர்­கள் யார் என்­பது தொடர்­பில் உறு­தி­யான தக­வல் கிடைக்­க­வில்லை.

இதே­வேளை, கள்ள மணல் ஏற்­றிய உழவு இயந்­தி­ரங்­கள் இரண்டை நேற்று முன்­தி­னம் பொலி­ஸார் கைப்­பற்­றி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Posts:

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job