மேட்டூரில் இரவு காவலாளி ஒருவர் மாவாசைக்காக உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயில் வழுக்கி விழுந்து லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ரங்கசாமி இரவு காவலாளியாக பணியாற்றிவர்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து தனது மிதிவண்டியில் வீடு திரும்பிய வேளையில் சிட்கோ அருகே மகாளய அமாவாசையை முன்னிட்டு உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயில் மோதி கீழே சாய்ந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த கருமலைக்கூடல் காவல் துறையினர்
சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்,
மேலும் இது தொடர்பாக போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment