வவுனியாவில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும், செயற்பட்டு வருகின்றதைக் காணக்கூடிய நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிதாக நிர்மானிக்கப்பட்டள்ள மலசலகூடமும் மக்கள் பாவனைக்கு இன்னும் கையளிக்கப்படதாக நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்தில் தொழில்புரிபவர்கள் மதுப்பாவனையிலும் சட்டவிராத நடவடிக்கையிலும், விடுதியாகவும் பயன்படுத்தி கொள்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவிட நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் குறித்த புதிய மலசலகூடத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. அத்துடன் பொது மலசலகூடத்தில் தொழில்புரியும் நபர்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தை தவறான நடவடிக்கைக்குப் பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் குடிமனைகளைச் சுற்றியுள்ளதால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு தங்கியுள்ள இருவர் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அவதானிக்க முடிந்துள்ளது.
இவ்வாறு மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தில் மதுப்பாவனையும் சட்டவிரோத நடவடிக்கையும் இடம்பெற்று வருவதை இங்குள்ள அதிகாரிகள் கண்டுகொள்ளமால் இருப்பது கவலையளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நகரத்தின் முக்கிய பகுதியிலுள்ள மலசலகூடத்தினை அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் தவிசாளர், உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தமது கண்களைத் திறந்துகொண்டு உறங்குகின்றதை இச் செயற்பாட்டில் அவதானிக்க முடிகிறது என தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment