வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர், கர்ப்பமாகியுள்ள சம்பவம் ஒன்று செவனகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
செவனகல பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி 05 மாத கர்ப்பிணியாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மாணவி குறித்து காவற்துறையிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறையினர் மாணவியின் தாயாரிடம் இது குறித்து வினவியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மாணவியின் தாயார் காவற்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாணவியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மற்றும் ஓர் சந்தேக நபரும் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிப்பிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், செவனகல காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment