நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 30, 2024

பிரித்தானியாவில் வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்


பிரித்தானியாவில் வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவில் நடந்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த ரீகன் ஜோஸ் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஜோஸ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

ஜோஸ் நான்கு மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, விபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

ரீகன் ஜோஸின் மனைவியும் இங்கிலாந்தில் தான் செவிலியராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment