நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, June 25, 2024

மாங்குளத்தில் நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்


மாங்குளத்தில் நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்

#மாங்குளத்தில் விபத்து. பழுதடைந்த பேருந்தை #திருத்திக்கொண்டிருந்த 3 பேர் பலி

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதியே இவ் விபத்து சம்பவித்திருக்கிறது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த லொறி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில் வீதியில் நின்ற நபர்கள் மூவர் லொறியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி பலியாகியுள்ளனர்

லொறியின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இரண்டாம் இணைப்பு

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர்  படுகாயமடைந்துள்ளார்   

இந்த விபத்தில் பேருந்து சாரதியான குப்பிழான்  பகுதியைச் சேர்ந்த குணசீலன் லோகேஸ்வரன் வயது 38 என்பவர் உயிரிழந்துள்ளார் ஏனைய இருவர் தொடர்பான பெயர் விபரங்களைஉடன்அறியமுடியவில்லை .

#MotorAccident #Mullaitivu #Mankulam

0 comments:

Post a Comment