நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 23, 2024

வவுனியாவில் 3 வயதுச் சிறுமியுடன் உறவு கொள்ள முற்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் கைது!! நடந்தது என்ன?


வவுனியாவில் 3 வயதுச் சிறுமியுடன் உறவு கொள்ள முற்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் கைது!! நடந்தது என்ன?

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றில், தந்தை சிறுகுற்றச் செயலில் சிக்கி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில், தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், தாயார் கூலி வேலைக்கு செல்லும்போது தனது பிள்ளைகளை அயல்வீட்டில் விட்டுச் செல்வது வழமை.

இவ்வாறு அயல்வீட்டில் விட்டுச் சென்ற நிலையிலேயே, 3 வயது சிறுமி பாலியல் தொல்லையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் தாயார் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment