பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி கொழும்பு வாழ் மலையக இளைஞர் , யுவதிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மீது சற்று முன் காவற்துறையினர் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் 'ஒக்டோபர் 24' போராட்டம் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலை 10 மணிமுதல் 12 மணி வரையில் காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
12 மணியுடன் இந்த போராட்டம் நிறைவுபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், முன்னறிவிப்புகள் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக வீதித் தடைகளை ஏற்படுத்திய காவல்துறையினர், போராட்டக்காரர்களை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர்.
எவ்வாறாயினும் , குறித்த இடத்திலே இதுவரை தமது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவ்விடத்திற்கு வந்து தமது கோரிக்கைக்கு தீர்வினை பெற்றுத்தராவிட்டால் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே இவ்விடத்தை விட்டு கலைந்து செல்லாவிட்டால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்படும் என காவற்துறையினர் போராட்டக்காரர்களை எச்சரித்திருந்த நிலையில் , இந்த நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , தமது போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரை தாம் இந்த போராட்டத்தை தொடரவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் 'ஒக்டோபர் 24' போராட்டம் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலை 10 மணிமுதல் 12 மணி வரையில் காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
12 மணியுடன் இந்த போராட்டம் நிறைவுபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், முன்னறிவிப்புகள் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக வீதித் தடைகளை ஏற்படுத்திய காவல்துறையினர், போராட்டக்காரர்களை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர்.
எவ்வாறாயினும் , குறித்த இடத்திலே இதுவரை தமது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவ்விடத்திற்கு வந்து தமது கோரிக்கைக்கு தீர்வினை பெற்றுத்தராவிட்டால் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே இவ்விடத்தை விட்டு கலைந்து செல்லாவிட்டால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்படும் என காவற்துறையினர் போராட்டக்காரர்களை எச்சரித்திருந்த நிலையில் , இந்த நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , தமது போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரை தாம் இந்த போராட்டத்தை தொடரவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment