நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

விக்­னேஸ்­வ­ர­னை கைவிட்ட கஜேந்­தி­ர­கு­மார் - சித்­தார்த்­தன்


வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் புதிய கட்சி அறி­விப்பு நிகழ்­வுக்கு, பேர­வை­யின் பங்­கா­ளி­க­ளான அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் புளொட் கட்­சி­கள் பங்­கேற்­க­வில்லை. அந்­தக் கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள், மக்­கள் பிர­தி­நி­தி­கள் எவ­ருமே கலந்து கொள்­ள­வில்லை.

தமிழ் மக்­கள் பேர­வை­யில், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தலை­மை­யி­லான அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் த.சித்­தார்த்­தன் தலை­மை­யி­லான புளொட் அமைப்­பி­ன­ரும் பங்­கா­ளி­க­ளாக உள்­ள­னர்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தனது அர­சி­யல் எதிர்­கா­லம் தொடர்­பில் பேர­வை­யின் கூட்­டத்­தில் அறி­விக்­கப் போவ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் புதிய கட்­சியை ஆரம்­பிக்­கும் நேற்­றைய கூட்­டத்­தில், காங்­கி­ரஸ் கட்­சி­யின் எந்­த­வொரு உறுப்­பி­னர்­க­ளும் கலந்து கொள்­ள­வில்லை. புளொட் அமைப்­பின் உறுப்­பி­னர்­கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட எவ­ரும் பங்­கேற்­க­வில்லை.

மேலும், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்ட போது அவரை ஆத­ரித்த மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளில், திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சர்­வேஸ்­வ­ரன், பொ.ஐங்­க­ர­நே­சன், இ.இந்­தி­ர­ராசா ஆகி­யோரே பங்­கேற்­ற­னர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். மேலும் முன்­னாள் அதி­பர் க.அருந்­த­வ­பா­ல­னும் நேற்­றைய கூட்­டத்­தில் பங்­கேற்­றி­ருந்­தார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டங்­க­ளில் பங்­கேற்­கும், பேரா­சி­ரி­யர் சி.க.சிற்­றம்­ப­ல­மும் நேற்­றைய கூட்­டத்­தில் கலந்து கொள்­ள­வில்லை.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job