மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணங்களுடன் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று இரவு 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனுடன் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையுடன் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் உலப்பனையில் இருந்து பொல்கொல்ல வரையான மாகாவலி கங்கையின் இரு புறங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
0 comments:
Post a Comment