முஸ்லீம் குடும்பப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு!! லண்டன் புலம்பெயர் தமிழ்க்குடும்பஸ்தர் மீது கொழும்பில் கடும் தாக்குதல்!!
கொழும்பு வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் லண்டனிலிருந்து வந்த 47 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது கடும்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது தொடர்மாடிக் குடியிருப்பு வீட்டு அறையிலிந்து தாக்குதல் மேற்கொண்டவர்களாலேயே காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்மாடிக் குடியிருப்பு பகுதியில் இன்னொரு வீட்டில் வசித்து வந்த முஸ்லீம் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத உறவைப் பேணியதாகத் தெரிவித்து குறித்த பெண்ணின் இரு ஆண் பிள்ளைகள், தமிழ்க் குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தலை மற்றும் முகப்பகுதிகளில் காயமடைந்து இயலாத நிலையில் இருந்த குடும்பஸ்தரை தாக்குதல் நடாத்திய இரு பிள்ளைகளுமே மாடியிலிருந்து கீழே இறக்கி காவலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்கள். இதன் பின் குறித்த குடும்பஸ்தர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
முஸ்லீம் குடும்பப் பெண்ணின் கணவன் அரபு நாடுகளுக்கு வியாபார நிமிர்த்தம் சென்று வருவதாகத் தெரியவருகின்றது. 41 வயதான அப்பெண்ணுக்கு 19 வயது, 17 வயதில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளார்கள். அவர்களே புலம்பெயர் தமிழன் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. குறித்த மாடிக்குடியிருப்பில் இருப்பவர்களின் தகவல்களின் படி குறித்த பெண் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் இருந்த நிலையில் வெளியே சென்று வந்த பிள்ளைகள் தாயை அங்கிருந்து மீட்ட பின் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment