This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, September 16, 2025

என்னுடன் இன்பமாக இருக்கலாம் என இளைஞர்களை அழைத்து குஞ்சுமணியில் ஸ்ரெப்லர். கிளிப் அடித்து சித்திரவதை செய்த ரஷ்மி!!

 


என்னுடன் இன்பமாக இருக்கலாம் என இளைஞர்களை அழைத்து குஞ்சுமணியில் ஸ்ரெப்லர். கிளிப் அடித்து சித்திரவதை செய்த ரஷ்மி!!

இந்தியாவில் இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து பணம்-செல்போனை பறித்துவிட்டு மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடித்து சித்ரவதை செய்த தம்பதியை பொலிஸார் கைதுசெய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயேஷ்(வயது29). இவருடைய மனைவி ரஷ்மி(23). இவருக்கு, ஆலப்புழையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1-ந் திகதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சென்ற அந்த இளைஞன், ரஷ்மியிடம் நெருங்கி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறித்தனர்.

தொடர்ந்து வாலிபரின் கைகளை கட்டித்தொங்கவிட்டு மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அவரது கை விரல் நகங்களை பிடுங்கினர். இதில் வலி தாங்கமுடியாமல் அலறினார்.

உடனே அவரது வாயை துணியால் கட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குக்கொண்டு போட்டுவிட்டுச்சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், இளைஞனின் முனகல் சத்தம்கேட்டு அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரன்மூளா பொலிஸார், வாலிபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயேஷ், அவரது மனைவி ரஷ்மியை கைதுசெய்தனர்.

பின்னர் பொலிஸார் நடத்திய விசாணையில், பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது பணத்துக்காக ரஷ்மி வாலிபர்களை குறிவைத்து முதலில் ஆசைவார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு அழைத்து பணம், செல்போன் உள்னிட்டவற்றை பறித்துள்ளார். மனைவிக்கு உடந்தையாக ஜெயேஷ் இருந்துள்ளார்.

கடந்த 5-ந்திகதி ஓணம்விழா அன்று ரான்னியை சேர்ந்த தன்னுடன் வேலைபார்த்து வந்த ஒரு இளைஞனையும் ரஷ்மி வீட்டிற்கு அழைத்து அவரிடம் இருந்தும் பணத்தை பறித்து கட்டிதொங்கவிட்டு சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆரன்முளா பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Saturday, September 13, 2025

எதற்காக கனடாப் பொலிசாரால் தமிழ்க் காவாலி மகிபன் தேடப்படுகின்றார்?

 


எதற்காக கனடாப் பொலிசாரால் தமிழ்க் காவாலி மகிபன் தேடப்படுகின்றார்?

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்.கடந்த மாதம் பிக்கரிங் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனை சந்தேக நபராக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஒகஸ்ட் 16 ஆம் திகதி அதிகாலை 1.10 மணியளவில், லிவர்பூல் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளை சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த 2 நபர்களை கண்டுபிடித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எனினும் அவர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் மேலதிக தகவல் வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் மகிபன் பேரின்பநாதன் என்பவர் தற்போது சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

Friday, September 12, 2025

யாழில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்தி 15 வயது மாணவியுடன் உறவு கொண்டவன் பிடிபட்டது எப்படி? அவதானம் பெற்றோரே!!


யாழில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்தி 15 வயது மாணவியுடன் உறவு கொண்டவன் பிடிபட்டது எப்படி? அவதானம் பெற்றோரே!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சிறுமியை 

து ஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைபாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, துன்னாலைப் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

யாழ் வடமராட்சியைச் சேர்ந்த வனிதா பலியாகியது ஏன்? ஒருவர் கைது!! நடந்தது என்ன?


யாழ் வடமராட்சியைச் சேர்ந்த வனிதா பலியாகியது ஏன்? ஒருவர் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வடமராட்சிகிழக்கு வத்திராயன் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு விசுவமடு கண்ணகிநகர் வீதி 12ம் கட்டையை தற்காலிக முகவரியாக கொண்ட மோகனபவன் வனிதா என்னும் இளம் குடும்ப பெண் இந்த வாரத்தின் முற்பகுதியில் வீதி விபத்தில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் மரணமாகியுள்ளார்.

கடந்த 09.09.2025 அன்றைய தினம் உறவினருடன் உந்துருளியில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உந்துருளியில் இருந்து தவறி விழுந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் நேற்றையதினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மோகனபவன் வனிதா எனும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.  இவர் பல மேடைகளில் நடனமாடி பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.

Thursday, September 11, 2025

விடிந்ததும் அதி பயங்கரம்.. மொட்டை மாடியில் தலை இல்லாமல் 2 உடல்கள்..!


விடிந்ததும் அதி பயங்கரம்.. மொட்டை மாடியில் தலை இல்லாமல் 2 உடல்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைக்கோட்டாளம் கிராமத்தில் நடந்த பயங்கரமான இரட்டை படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவத்தில், கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியின் மனைவி லட்சுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு ஆகிய இருவரும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். குளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோரின் உடல்கள் தலை இல்லாமல் கிடந்தது கண்டறியப்பட்டது.

தலை துண்டிக்கப்பட்ட இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், லட்சுமிக்கும் தங்கராசுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்திருக்கலாம் எனவும், இதனை அறிந்த குளஞ்சி ஆத்திரத்தில் இருவரையும் தலை துண்டித்து படுகொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் தலைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட குளஞ்சி தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தக் கொடூரமான இரட்டை படுகொலை சம்பவம் மலைக்கோட்டாளம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

யாழில் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியை குகாசினி மரணம்!!


யாழில் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியை குகாசினி மரணம்!!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று வயதில் மகளுடன் சக்கோட்டையில் வாழ்ந்து வரும் நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் குகாசினி நிஷாந்தன் வயது 37என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது 

Tuesday, September 9, 2025

அமெரிக்காவில் பெண்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த யாழ்ப்பாணத் தமிழன் திருக்குமார்!!


அமெரிக்காவில் பெண்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த யாழ்ப்பாணத் தமிழன் திருக்குமார்!!

அமெரிக்காவின் ஹாட்-டாக் மற்றும் டோனட்ஸ் மீதான அன்பைத் தாண்டி, நியூயோர்க் நகர மக்கள் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர். அதற்கு காரணம் நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற தோசை மனிதர் என்று அழைக்கப்படும் திருக்குமார் கந்தசாமி.

திருக்குமார் கந்தசாமி யாழ்ப்பாணத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராளமான கனவுகளுடன் நியூயோர்க்கிற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர் தான் திருக்குமார் கந்தசாமி.

இன்று நியூயோர்க் தெருவோர தோசை கடைகளின் அடையாளமாக மாறி இருக்கிறார். ஆனால் தனது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட காரம் நிறைந்த சீஸ் மசாலா தோசை தான் கடைசியில் அவரின் அடையாளமாக மாறியுள்ளது.

காலை 9 மணியளவில், வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் இவரது தள்ளு வண்டிக் கடையின் தோசையை சுவைக்க இந்தியர்களை கடந்து அதிகளவில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே கூடிவிடுவார்கள்.

திருவின் தோசைக்கு கனடா, ஜப்பான் மற்றும் கலிஃபோர்னியாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். தோசை மனிதன், NYDOSAS உள்ளிட்ட பக்கங்களே அதற்கு சாட்சி. திருவின் தோசை வண்டியின் சுவர்கள் உலகெங்கிலும் இருந்து அவருக்கு கிடைத்த செய்தித்தாள் வெட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களால் நிரம்பி காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

அதேபோல் மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் வழங்கப்படுகின்றன.

Sunday, September 7, 2025

இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்.!

 


இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்.!

இன்று (08) முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சயீனா மரணம்!!


கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சயீனா மரணம்!!

கனடாவில் வாழ்ந்து வரும் வடமராட்சி கல்லுவம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் தனது மகளின் மருத்துவத் தேவைக்காக வடமராட்சி கல்லுவம் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மகளின் மருத்துவத் தேவைக்காக வந்த நிலையில் குறித்த சிறுமி நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகக் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை (08) வடமராட்சி கல்லுவத்தில் உள்ள வீட்டில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

 


இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

யாழில் நடை உடற்பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தாலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடை உடற்பயிற்சிக்கு சென்றவேளை காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (05) கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பற்றைக்குள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இடம் தெரியாமல் அந்தப் பகுதிக்கு சென்றவேளை குருதியமுக்கம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Saturday, September 6, 2025

மட்டு’வில் குடும்பப் பெண் விதுசாவைக் கொன்றது யாழ்ப்பாண நகைக்கடைக்காரனா? பொலிசார் விரைகின்றனர்!! நடந்தது என்ன?


குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25 ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டியில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.குறித்த கைது நடவடிக்கை படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் வெள்ளிக்கிழமை(05) கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தப்பி சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவராவார்.இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டம் தீட்டி அரங்கேற்றியுள்ளதை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்தரதாரியின் கடையில் பணியாற்றிய சூத்தரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருக்கு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Friday, September 5, 2025

மலையகப் பகுதி பயணங்களில் நடக்கும் நியூட்ரல் (Neutral) மரணங்கள்…


சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 

நியூட்ரல் (Neutral) மரணங்கள்…

மலையக பகுதிகளில் இடம்பெறும் அனேக வாகன விபத்துக்கள் வாகனங்களை சாரதிகள் நியூட்ரலில் செலுத்துவதால் இடம்பெறுகிறது. அதே போன்ற ஒரு நியூட்ரல் விபத்தாகவே எல்ல பஸ் விபத்தை பார்க்கவேண்டியிருக்கிறது.

தப்பியவர்களின் கூற்றுப்படி சாரதியின் இறுதி வார்த்தைகள் “பிரேக் பிடிக்குதில்லை” என்பதாக இருக்கிறது. குறித்த பஸ்சானது எல்ல எனும் உயர் நில பகுதியில் இருந்து அம்பாந்தோட்டையின் தங்காலை எனும் தாழ் நிலை பகுதிநோக்கி பயணித்துகொண்டிருந்தது. உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதிநோக்கி பள்ளத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் திடீரென பிரேக் பிடிக்கவில்லையெனில் அது ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது. எனினும் முறையான சாரதியெனில் அதையும் தடுத்திருக்கலாம்.

குறிப்பாக மலையக பகுதிகளில் வாகனம் ஓடுபவர்கள் மலைப்பிரதேசங்களிலிருந்து கீழ் நோக்கி வரும்போது நியூட்ரலில் வாகனத்தை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். எரிபொருளை மீதப்படுத்த இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுக்கின்றனர் இது ஒரு பாரதூரமான ஆபத்தான பயணமுறை என்பதை சாரதிகள் உணர்வதில்லை.

பள்ளத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வாகனம் கியர் இன்றி நியூட்ரலில் சென்றால் சாதாரண எஞ்சின் உந்துதலை விடவும் அதிக உந்துதலை கொண்டிருக்கும் அந்த உந்துதலை சமாளித்து வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பிரேக் மாத்திரமே உதவியாக இருக்கும். இயந்திரத்தில் இருந்து கியர் தொடர்பு துண்டிக்கப்பட்ட வாகனம் கட்டறுத்த காட்டெருமை போலாகிவிடும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது எஞ்சினேயொழிய பிரேக் இல்லை என்பதை பல சாரதிகள் உணர்வதில்லை.

உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி வாகனம் ஒடும்போது எப்போதும் Low கியரில் பயணிப்பதே மிகவும் பாதுகாப்பானது. ரொப் கியர் வாகனமாக இருப்பின் 3th கியரில் பயணிப்பது பாதுகாப்பானது ஹை கியர் வாகனமாக இருப்பின் ரொப் கியரில் பயணிப்பது பாதுகாப்பானது இது முழுக்க முழுக்க வாகனம் இயந்திர கட்டுப்பாட்டில் இருக்கும் நீங்கள் பிரேக் பாவிக்க சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கும். எரிபொருளை மிச்சம் பிடிக்கிறோம் என்ற பெயரில் High கியரிலோ நியூட்ரலிலோ பயணித்தால் விலைமதிப்பற்ற உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.

உயர் நிலத்தில் இருந்து தாழ் நிலம் நோக்கி வாகனங்கள் ஓடும்போது வேகத்தை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக பிரேக்கினை அழுத்தும் செயற்பாட்டில்தான் அனேக சாரதிகள் ஈடுபடுகின்றனர். பிரேக் சூ என்பது இரும்பினால் ஆன பொருள் இல்லை அது தேயக்கூடிய பேப்பர் கலவையினால் ஆனது. அதிக அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது அது எரிந்துபோய்விடும். பிரேக் பிடிக்க பிரேக் சூ எரியும் நாற்றத்தோடும் ரிம்கள் சூடாகி புகை பறக்கவும் விரைந்துசெல்லும் வாகனங்களின் பிரேக் எந்நேரத்திலும் செயலிழந்து போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்ல விபத்தில் சிக்கிய இந்த பேருந்துக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது. சாரதி நியூட்ரலில் அல்லது ரொப் கியரில் பயணித்துள்ளார் முழுக்க முழுக்க வாகனம் பிரேக்கின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது தொடர்ச்சியாக பிரேக்கினை அழுத்தி வளைவுகளில் வேகத்தை குறைத்துக்கொண்டு வர பிரேக் சூ முற்றாக எரிந்துபோயிருக்கிறது. ஈற்றில் கைவிட்டு விட்டது. கட்டறுத்த காட்டெருமையாய் பள்ளத்தை நோக்கி பாய்ந்து பலியெடுத்திருக்கிறது.

மலைப்பிரதேசங்களில் நியூட்ரலில் பயணிக்க வேண்டாம் என வீதியோரங்களில் அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டும் இருக்கிறது அதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. சில உயர் மலைப்பகுதிகளை கொண்ட நாடுகளில் கீழ்நோக்கி பயணிக்கும் போது நீங்கள் எத்தனையாவது கியரில் பயணிக்கவேண்டும் எனவும் கூட அறிவித்தல் பலகை வைத்திருப்பார்கள் அதை விடுத்து பிரேக்கை பிடித்து பிடித்து உயர் நிலை கியரில் சென்றால் நடுவழியில் பிரேக் பெயிலியர் ஆகி நிற்கவேண்டிவரும் அல்லது பள்ளத்தில் பாய்ந்து படுகொலையாகவேண்டிவரும்.

குறிப்பாக ஒயில் மூலம் பிரேக் சிஸ்டம் இயங்கும் வாகனங்கள் மலைப்பகுதிகளில் கீழ் நோக்கி பயணிக்கும் போது கியர்களில் வராது பிரேக்கில் வந்தால் மிக குறுகிய காலத்தில் பிரேக் லெதர்கள் சூடாகி எரிந்தோ அல்லது பிரேக் சூக்கள் எரிந்து பிரேக் பம் பிஸ்டன்கள் வெளியேறி ஒயில் ஓடியோ பிரேக் செயலிழந்துபோக வாய்ப்புக்கள் அதிகம்.

Air மூலம் பிரேக் சிஸ்டம் வேலை செய்யும் வாகனங்கள் கொஞ்சம் பாதுகாப்பானது ஏதேனும் சந்தர்ப்பங்களில் பைப்புக்கள் வெடித்தோ வேறு வழியிலோ ஏர் வெளியேறினால் தானாகவே கேன்பிரேக் ஓப்பன் ஆகிவிடும் வாகனம் பிரேக் ஆகி நின்றுவிடும். ஆனால் தொடர்ச்சியாக பிரெக் பிடித்ததன் மூலம் பிரேக் சூ எரிந்துபோயிருந்தால் பிரேக் பிடித்தாலும் பிடிபடாது. எல்ல பஸ் பள்ளத்தில் பாய்ந்தமைக்கும் இதுவே காரணம். சாரதியின் முறையாற்ற நடத்தையே அவரையும் பலிகொண்டு மேலும் 14 பேரையும் காவு கொண்டிருக்கிறது.

சு.பிரபா

வவுனியாவில் கோவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசு கொண்டு வந்த வாகனம் வெடித்து எரியும் காட்சி!!


வவுனியாவில் கோவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசு கொண்டு வந்த வாகனம் வெடித்து எரியும் காட்சி!!

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்துள்ளன. சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரும் ஆலயத்தில் நின்ற மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், பட்டா ரக வாகனத்தின் பின்பகுதி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Thursday, September 4, 2025

எல்ல பேருந்து விபத்தில் 10 பேர் பலி!


எல்ல பேருந்து விபத்தில் 10 பேர் பலி!

வியாழக்கிழமை தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

நகராட்சி ஊழியர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து, சாலையின் 24வது கிலோமீட்டர் தூண் அருகே, வீதியை விட்டு விலகி சரிவில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதே நேரத்தில் அவசரகால குழுவினரும் காவல்துறையினரும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளன. இது சமீபத்திய மாதங்களில் இந்தப் பகுதியில் பதிவான மிக மோசமான வீதி விபத்துகளில் ஒன்றாகும்.


யாழ் வல்லைவெளியில் தந்தை வாகன விபத்தில் பலி!! மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!


யாழ் வல்லைவெளியில் தந்தை வாகன விபத்தில் பலி!! மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்த போது தந்தை வல்லை வெளியில் வாகன விபத்தில் உயிரிழந்தார் ,

தாயார் ஒரு ஆசிரியர் தனது வீட்டில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார் , தாயின் சகோதரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் வறுமையிலும் , அயலவர்கள் தமது பிள்ளைகளை அயற்கிராம பாடசாலைகளில் சேர்த்த போதும் தனது மகளை யா / அல்வாய் அம்பாள் வித்தியாலயத்தில் சேர்த்து கல்வி கற்பித்து வந்தார்,

பாடசாலை , கோட்டம் , வலய மாவட்டம் மாகாணம் மட்ட போட்டிகளிலும் முதலிடம் பெற்ற பிரசன்னா ரஸ்வீனா தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து தாயாருக்கும் , பாடசாலைக்கும் , அல்வாய் மண்ணுக்கும் , உறவுகளுக்கைம் பெருமையை தேடித் தந்திருப்பதுடன் தாயாரின் முயற்சியினால் கஷ்டங்கள் துயரங்களை கடந்து சித்தியடைந்துள்ளார் ;

Tuesday, September 2, 2025

செம்மணியில் பெரிய எலும்புக்கூடுத் தொகுதியுடன் மீட்கப்படு்ம் சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதி!!


செம்மணியில் பெரிய எலும்புக்கூடுத் தொகுதியுடன் மீட்கப்படு்ம் சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதி!!

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன் , ஒப்பிட்டளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அருகருகே அடையாளம் காணப்பட்டுள்ளது .செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் , தொடுகையுற்றவாறு , ஒப்பிடளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்பு கூடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை , கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மூன்று சந்தர்ப்பங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது மேலும் இரு எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடுகையுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Monday, September 1, 2025

யாழில் பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி சிவகுமார் மரணம்!!

 


யாழில் பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி சிவகுமார் மரணம்!!

மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கிளானை பகுதியில் தோட்டம் செய்கின்றார். இவர் சகோதரியின் வீட்டில் இருந்தே தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.பன்றியிடம் இருந்து தனது மரவள்ளி தோட்டத்தை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். இரவில் மாத்திரம் மின்சாரம் பாய்ச்சப்படும். காலையில் மின்சாரத்தை நிறுத்துவது வழமை.

அவருக்கு இரண்டு தோட்டங்கள் உள்ள நிலையில் மற்றைய தோட்டத்துக்கு சென்றுவிட்டு பின்னர் குறித்த தோட்டத்திற்கு வந்துள்ளார். மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டதாக நினைத்து வேலியில் கை வைத்தவேளை அவரை மின்சாரம் தாக்கியது. இதன்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Sunday, August 31, 2025

மட்டு’வில் 3 சிறுமிகளுடன் படுத்து 2 சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 சிறுவர்கள் கைது!! நடந்தது என்ன?

 


மட்டு’வில் 3 சிறுமிகளுடன் படுத்து 2 சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 சிறுவர்கள் கைது!! நடந்தது என்ன?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பா லி யல் து ஸ்பிர யோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர் ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடற்கரை பகுதியில் மீன் வாடியில் இருந்து வருவதாகவும் வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் தங்கியிருந்து வந்துள்ளனர்.

இதன்போது, கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று து ஸ்பிர யோகம் செய்ததாகவும், அவனை அடையாளம் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, குறித்த அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பி ணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர். இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பா லி யல் து ஸ்பிர யோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பா லி யல் து ஸ்பி ரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய் தந்தை பிரிந்து வாழ்வதால் ஏற்பட்ட மனவிரக்தி!! 16 வயது மாணவி சுபானு தீயில் எரிந்து பலி!!


தாய் தந்தை பிரிந்து வாழ்வதால் ஏற்பட்ட மனவிரக்தி!! 16 வயது மாணவி சுபானு தீயில் எரிந்து பலி!!

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள் ளார்.இடைக்காடு – அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Thursday, August 28, 2025

மட்டக்களப்பு கல்லடியில் கோர விபத்து!! பரிதாபகரமாகப் பலியான அழகிய குழந்தை!!


மட்டக்களப்பு கல்லடியில் கோர விபத்து!! பரிதாபகரமாகப் பலியான அழகிய குழந்தை!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!… 

மரணம் கொடியதுதான். மனதை ரணமாக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு இது. ஆழ்ந்த அனுதாபங்கள் குட்டி குட்டி அழகு தேவதை போன்ற உன் அழகில் மயங்கித்தான் ஆண்டவன் உன்னை இந்த பிஞ்சு வயதில் அருகில் அழைத்தானோ தெரியவில்லை கடந்த 5 நாட்களின் முன் அதிகாலை வேளையில் மட்டு கல்முனை சாலை வழியே கொழும்பு சென்று திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கல்லடி முருகன் ஆலயத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் சிக்கிங்கொண்ட செய்தியை சேகரித்து பதிவேற்றியிருந்தோம் அந்த விபத்து ஒரு பாரிய விபத்தாக அமைந்திருக்காது என கடந்து சென்றேன். பிற்பட்ட நாட்களில் அந்த விபத்து தொடர்பாக மேலதிக தகவல்களை கேட்ட போது மனதுக்கு மிகக் கவலையாக இருந்தது ஒரு கணம் அதிர்ச்சியாக கூட இருந்தது விபத்து நடைபெற்ற சந்தர்ப்பத்தில் காரில் 6 பேர் பயணித்திருந்ததுடன் அதில் 8 மாத கைக் குழந்தை ஒன்றும் அந்த குழந்தையின் 3 வயது சகோதரனும் தாயும் தந்தையும் அம்மம்மா சித்தப்பா என்போர் பயணித்துள்ளனர். விபத்து நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அனைவரும் ஆசனப் பட்டி அணிந்திருந்தனர். கைக்குழந்தையை நித்திரை தூங்கச் செய்வதற்காக தோளில் போட்டு தாலாட்டுகின்ற போது திடீரென விபத்து சம்பவித்ததால் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலைப்பகுதி காரின் மேல் பகுதியில் அடிபட்டு குழந்தை மயக்கமுறுகிறது தாயினது இரு கால்களும் உடைந்த நிலையில் தந்தைக்கு கை முறிவு ஏற்படுகிறது அந்த குழந்தையின் அம்மம்மாவுக்கும் கால் உடைவு ஏற்பட்ட நிலையில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த சகோதர இனமான முஸ்லிம் குடும்பம் ஒன்று அவர்களை உடனடியாக மீட்டு அயலவர்களின் உதவியோடு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்தான் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்களால் அறிவிக்கப்படுகிறது குழந்தை மூளைச்சாவடைந்து உள்ளது என்று யார்தான் தாங்கிக் கொள்வார்கள் அந்த செய்தியை. பின் குடும்பத்தார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்தபோதும் குழந்தை நேற்று காலை இவ் உலகை விட்டு பிரிந்து சென்று விட்டது என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது. குழந்தையின் தாய் இரண்டுகால்களும் உடைந்த நிலையில் 3 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இறப்புக்களும் இழப்புக்களும் மனித வாழ்வின் நியதிதான் என்றாலும் இவ்வாறான இழப்புக்களை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுள் மீது கோபம் கொள்ளத்தான் செய்கிறது. இக் குழந்தையின் ஆத்மா இறைவன் கழல் சேரும் இறைவனின் நிழலில் வாழ நாமும் பிரார்த்தனை செய்கிறோம்.

Wednesday, August 27, 2025

கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து... இருவர் பலி...!


கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து... இருவர் பலி...

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று(29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் மோதி டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரை கொன்றவரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது - 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர்!


பெற்றோரை கொன்றவரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது - 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர்!

கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலேவெல மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஏ.ஜி. விமலசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மகுலகஸ்வெவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதற்கமைய, இறந்தவர் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரித்த பொலிஸார், நேற்றையதினம் (26) காலை விடுமுறையில் இருந்த ஒரு கடற்படை வீரரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த கொலை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கடந்த 2019 ஏப்ரல் 16ஆம் திகதி, தேவஹுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையைத் தொடர்ந்து, தம்பதியரின் இரண்டு மகன்களும் தனிமையில் அநதாரவாகியுள்ளனர்.

இளைய மகன் அப்போது கடற்படையில் இணைந்து தனது பயிற்சி முடித்திருந்தார்.

குறித்த தம்பதியினரை இறந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். காணித் தகராறுதான் கொலைக்குக் காரணமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

​​அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

2019 ஆம் ஆண்டு தமது பெற்றோரின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும், நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வந்த இறந்த பெண்ணின் சகோதரதே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#tamilnewsupdates #NewsUpdate #srilanka #TamilNews #SriLankaNews #news #newsfeed

Tuesday, August 26, 2025

news

News sle 

Monday, August 25, 2025

சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!


சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!

லொசானில்  நேற்று மாலை விபத்து ஒன்றை அடுத்து, இளைஞர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில்  17 வயது இளைஞன் இறந்த செய்தியை அறிந்ததும் நேற்று இரவு 9:30 மணி பிரெலாஸ் மாவட்டத்தில் சுமார் நூறு இளைஞர்கள் கூடியிருந்தனர்.

முகமூடி அணிந்த இளைஞர்கள் வாணவேடிக்கை பொருட்களால் பொலிசாரை குறிவைத்தனர். வீதியில் குப்பைக் கொள்கலன்களையும் அவர்கள் தீயிட்டு எரித்தனர்.

 லொசான் போக்குவரத்து நிறுவனமான TL க்கு சொந்தமான பேருந்தும்  சேதமாக்கப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு அமைதி திரும்பியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளான சுவிஸ் குமார் உட்பட்டவர்கள் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதா?

 


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளான சுவிஸ் குமார் உட்பட்டவர்கள் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதா?

யாழ்ப்பாணத்தில் 2015 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நவம்பர் 6 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று (25) விசாரிக்கப்பட்டன.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதாக சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மேல்முறையீட்டு விசாரணைக்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரினார்.

இந்த மேல்முறையீடுகளை விரைவாக விசாரிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்தார்.

அதன்படி, தொடர்புடைய மேல்முறையீட்டை நவம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயதான மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக “சுவிஸ் குமார்” உட்பட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என்றும், எனவே அவர்களை விடுதலை செய்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் தங்கள் சட்டத்தரணி கள் மூலம் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Sunday, August 24, 2025

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது ஏன்?

யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் , இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Saturday, August 23, 2025

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 


கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசாங்கம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும்.

TOEFL Essentials test தற்போது Express Entry உள்ளிட்ட முக்கிய வதிவிட வழிகளுக்குப் பொருந்தும்.

இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும்.

Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும். ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், TOEFL Essentials test குறித்த கீழ்வரும் முக்கிய தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை,

இந்த தெரிவு 90 நிமிடங்கள் நீளமுடையது

கேட்கும் திறன், வாசிப்பு, எழுத்து, மற்றும் பேசும் திறன் ஆகிய நான்கு பகுதிகளையும் மதிப்பீடு செய்கிறது

தெரிவுக்குப் பின் கேட்கும் மற்றும் வாசிப்பு திறனுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும்

முழுமையான மதிப்பீடு 6 நாட்களில் வெளியிடப்படும்

சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?


சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?

பெர்னில் தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ் பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு,  5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து ஆண்டுகள் நாட்டில் வசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்ய தூண்டுதல், ஆவணங்களை மோசடி செய்தல் மற்றும் சமூக உதவியை சட்டவிரோதமாகப் பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு நேற்று இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதகர் குமார் வில்லியம்ஸ் தனது தேவாலயத்திலிருந்து வருமானத்தை மறைத்து, அதே நேரத்தில் கோனிஸ் சமூகத்திடமிருந்து சமூக உதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

எனவே சமூக நல அலுவலகம், ருண்ட்ஷாவ் தெரிவித்தபடி, மோசடி மற்றும் சமூக உதவியை து ஷ்பிர யோகம் செய்ததாக புகார் அளித்தது.

அண்மைய ஆண்டுகளில், போதகர்  வில்லியம்ஸ் மீண்டும் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

சிறார்கள் உட்பட பல பெண்கள் அவர் மீது பா லி யல் து ஷ்பிர யோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். வில்லியம்ஸ் எப்போதும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

2023 ஆம் ஆண்டில், போதகர் வில்லியம்ஸ் நெருக்கமான வீடியோ அரட்டைகளில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தன.

ஒரு கிளிப்பில், அவர் ஒரு பெண்ணை ஆடைகளை அவிழ்க்க உத்தரவிடுகிறார்.

இந்த காட்சிகள் திருச்சபையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தின என்று, முன்னாள் சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, மற்ற பெண்கள் முன்வந்து இதே போன்ற அனுபவங்களை விவரித்தனர்.

வில்லியம்ஸ் ஒரு தேவதை போன்ற ஆன்மீக வேடங்களில் நடித்து பா லிய ல் து  ன்பு றுத்தல் செய்ததாக சில பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு பெண், பேய்களை விரட்டுவதாக சாக்குப்போக்கில் தனது தனிப்பட்ட அங்கத்தை  தொட்டதாக கூறினார்.

உயர் பிராந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் இறுதியானது அல்ல என்றும் அவர்,  பெடரல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 22, 2025

“கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” என கூறி 2015ல் பதிவியை விட்டு துரத்திய ரணிலை சிறைக்கு அனுப்பிய அந்த கெட்ட பயல் யார்?


“தொலைந்து விடு, கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” – இவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015-ல், மத்திய வங்கி பிணை மோசடியை விசாரித்த CID இயக்குநர் ஷானி அபேசேகரக்கு கூறிய வார்த்தைகள்.

பின்னால், ஷானி அபேசேகர சில போலிக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சுமார் ஒரு வருடம் மறியலில் இருந்தார்.

சரியாக 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஓய்வு பெற்ற ஷானி, இன்று CID இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டு, ரணிலை மறியலுக்கு அனுப்பியுள்ளார்.

கெட்டபய சார் இந்த ஷானி!

ரணிலை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பதில் நியாயம் இருந்தாலும், சமயங்களில் சட்டத்தின் ஆட்சியில் ரணில் சதுரங்கம் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.

1988-களின் “பட்டலந்த” சித்தரவதை முகாம் போன்ற பழைய பைல்களை மறந்தாலும்,

இறுதியாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்:

– உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்காமல் இழுத்தடித்தமை,

– தேர்தல்களை தாமதப்படுத்தியமை அல்லது தடுத்தமை,

– உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பாராளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய முயற்சித்தமை,

என சில உதாரணங்களை கூறலாம்

ரணில் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் இவ்வாறு செயற்பட்டது கவலைக்குரியது. இன்றும் கூட நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு ரணில் இருந்தது, சட்டவாட்சியின் மீதும், நீதித்துறையின் மீதமுள்ள அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குச் செய்த சேவையை மதிக்கும் அதேவேளை, இந்த நிகழ்வை, எந்தத் தலைவரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதையும், ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை மதிப்பது கட்டாயம் என்பதையும் வலியுறுத்தும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க கைது!


 ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று அவர் முன்னிலையாகியிருந்தார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில்உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, ​​16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றது.

முன்னதாகவே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.     

Thursday, August 21, 2025

மட்டு’வி்ல் சம்பவம்!! இரகசிய திருமணம் செய்த காதலி!! வெளிநாட்டிலிருந்து வந்த காதலனால் கடத்தப்பட்டது ஏன்?

 


மட்டு’வி்ல் சம்பவம்!! இரகசிய திருமணம் செய்த காதலி!! வெளிநாட்டிலிருந்து வந்த காதலனால் கடத்தப்பட்டது ஏன்?

மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு முன்னால் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு அவரவர் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளதுடன், பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பெண் விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணையில் பங்கெடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமானத்தன்று குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்று நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.வண்டியில் கடத்த முற்பட்டுள்ளனர். காப்பாற்ற முற்பட்ட காதலியின் உறவினர் ஒருவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று தள்ளி விட்டு சினிமா பாணியில் குறித்த பெண்ணை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நல்லுார் கோவிலுக்கு அருகில் காவாலிகளால் வீடு தீ வைப்பு!! வீட்டார் நல்லுார் சென்ற பின் சம்பவம்!!


 நல்லுார் கோவிலுக்கு அருகில் காவாலிகளால் வீடு தீ வைப்பு!! வீட்டார் நல்லுார் சென்ற பின் சம்பவம்!!

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது.  நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்ற சமயம் , வீட்டில் யாருமில்லாத நேரம் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் வரவேற்பறையில் காணப்பட்ட தளபாடங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் இருந்து பெரும் புகை வருவதனை அவதனித்த கோயிலுக்கு சென்றவர்கள் . அயலவர்களுக்கு அறிவித்தது ,  அயலவர்களுடன் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து , ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பினார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த பாடசாலை நண்பனுடன் புங்குடுதீவு சியாமளா உல்லாசம்!! நகைகளை நண்பனுக்கு கொடுத்து விட்டு களவு போய்விட்டது என நடித்து பிடிபட்டது எப்படி?

 


லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த பாடசாலை நண்பனுடன் புங்குடுதீவு சியாமளா உல்லாசம்!! நகைகளை நண்பனுக்கு கொடுத்து விட்டு களவு போய்விட்டது என நடித்து பிடிபட்டது எப்படி?

பிரான்ஸ் றேம்ஸ் பகுதியில் வசிக்கும் யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சர்மிளா என்பவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அவருடன் அவரது வீட்டில் தங்கியிருந்த லண்டனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சுரேஸ்குமார் என்பவரும் பொலிசாரால் தேடப்படுகி்ன்றார்.

நடந்தது என்ன?

வர்ணகுலன் சியாமளா என்ற 41 வயதான குடும்பப் பெண், கணவன் வியாபார தேவை கருதி இந்தியா சென்ற நிலையிலும், 17 வயதான மகன் நண்பர்களுடன் வேறு நாடு ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் லண்டனில் வசிக்கும் குடும்பஸ்தரான தனது பாடசாலை நண்பனான சுரேஸ்குமார் என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்து சில நாட்கள் இருவரும் வீ்ட்டில் தனிமையில் இருந்துள்ளனர். சுரேஸ்குார் மீண்டும் லண்டன் சென்ற பின் சியாமளா வீட்டில் வைத்திருந்த தனது 50 பவுண் நகைகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிட்டுள்ளார், பொலிசார் தீவிர விசாரணைகளில் இறங்கிய போது சியாமளாவின் வீட்டு CCTV சில நாட்கள் செயலிழந்துள்ளதை அவதானித்ததுடன் அது வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதையும் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன் அருகில் உள்ள பகுதிகளின் காணப்பட்ட CCTV பதிவுகளின் படி சியாமளாவுடன் கணவர் அல்லாத ஒருவர் உள்ளே சென்று வருவதையும் கண்டு பிடித்துள்ளனர். அயலவர்களை விசாரித்த போது அவர்களும் சந்தேகப்படும்படியான நடமாட்டாங்கள காணப்படவில்லை என கூறியிருந்தனர். அத்துடன் சியாமளா வீட்டின் வெளிக் கதவு திருடன் உடைப்பது போல் உடைக்கபடாது வித்தியாசமான முறையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும்  அலுமாரியும் அதே போல் உடைக்கப்பட்டிருந்ததையும் அவதானித்து விசாரணைகளைத் தொடங்கிய போதே சியாமளா தனது கள்ளக்காதலனுக்கு நகைகளைக் கொடுத்த பின்னர் காப்புறுதி பெறுவதற்காக நாடகமாடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சியாமளா பொலிசாரால் கைது செய்யப்பட்டு்ள்ளதாகவும் அவருடன் தங்கியிருந்த லண்டன் சுரேஸ்குமாரும் பொலிசாரால் தேடப்படுவதாகவும் பிரான்ஸ் தமிழ் ஊடகத்தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

Wednesday, August 20, 2025

தோட்டத்துக்கு சென்ற 28 வயது சுபாசினியும் தாயார் குமாரியும் யானை மிதித்து பலி!! நடந்தது என்ன?


தோட்டத்துக்கு சென்ற 28 வயது சுபாசினியும் தாயார் குமாரியும் யானை மிதித்து பலி!! நடந்தது என்ன? 

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயும் மகளும் மரணம்

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்தார்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியான இனோகா குமாரி செயற்பட்டுள்ளார். காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளார். நேற்று காலை 9.00 மணியளவில், வயலில் தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது.

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் மருத்துவமனையில் சேர்க்க குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக திட்டம்: அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு!


 நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக திட்டம்: அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்காலத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகக் கூறினார்.

நேற்று (20) இரவு சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நேரடி அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த ஆவலுடன் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்

Tuesday, August 19, 2025

மகளின் குழந்தைப் பேற்றை பார்வையிட யாழிலிருந்து சுவிஸ் சென்ற 51 வயது பெண் அதிகாரி மருமகனால் க ற்பழி க்கப்பட்டார் !! மருமகன் கைது!!


மகளின் குழந்தைப் பேற்றை பார்வையிட யாழிலிருந்து சுவிஸ் சென்ற 51 வயது பெண் அதிகாரி மருமகனால் க ற்பழி க்கப்பட்டார் !! மருமகன் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து சுவிஸ்லாந்துக்குச் சென்ற 51 வயது குடும்பப் பெண் தனது மகளின் கணவனால் க ற்பழி க்கப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

சில வருடங்களுக்கு முன் சுவிஸ்லாந்துக்கு திருமணம் முடித்துச் சென்ற மகள் தனது 2 வது மகப் பேற்றுக்காக தனது தாயாரை சுவிஸ்லாந்துக்கு வரவழைத்துள்ளார். யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் முகாமைத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் குறித்த குடும்பப் பெண் சுவிஸ்லாந்து சென்று மகளுடன் தங்கியிருந்த போது மகப்பேறு நடந்து ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் மருமகனால் க ற்பழி க்கப்பட்டதாக தெரியவருகின்றது. பிள்ளையுடன் படுத்திருந்த மகளை அறைக்கு வெளியே பூட்டி விட்டு தாய் படுத்திருந்த அறைக்குள் புகுந்த மருமகன் நித்திரையில் கிடந்த மாமியுடன் உறவு கொள்ள முற்பட்ட போது மாமியார் திமிறி மறுத்துள்ளார். 

அதன் காரணமாக தாயாரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்திய பின்னர் தாயாரை வ ல்லு றவு க்குள்ளாக்கியதாக மகள் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பொலிசார் மருமகனை கைது செய்யும் போது அவர் நிறை வெறியில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது. சுவிஸ்லாந்தில் தலைநகரான பேர்னில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 மாமியாரைக் க ற்பழி த்த மருமகனின் தந்தை பேர்னில் பிரபல மோட்டார் கார் உற்பத்தி நிறுவனத்தில் முக்கிய பதவியில் உள்ளவர் எனவும் யாழ்ப்பாணத்தில் கே.கே.எஸ் வீதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வர்த்தக கட்டம் ஒன்றின் உரிமையாளராக உள்ளதாகவும் சுவிஸ்தமிழ்த் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Sunday, August 17, 2025

நல்லுார் முருகனின் சிவப்புச்சட்டை பரதேசிகளின் ரவுடித்தனம்!! பெண்கள் மீது கொடூர தாக்குதல்!!


நல்லுார் முருகனின் சிவப்புச்சட்டை பரதேசிகளின் ரவுடித்தனம்!! பெண்கள் மீது கொடூர தாக்குதல்!!

இன்று (17) நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்த மண்டபத்திற்கு போகும்போது வசந்த மண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்ந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய ரவுடி ஒருவன் தாக்கியுள்ளான்.

இதனால் வசந்த மண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள்.

 சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித் திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

நல்லுார் முதலாளியான சயந்தன் செம்மறி குறித்த ரவுடிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றான். பின் வீதியை திறக்காது மூடி வைத்துள்ள சயந்தன் செம்மறி வெளிவீதியில் பெருமளவு மக்கள் திரண்டுள்ள நேரத்தில் சிவப்பு கயிறு கட்டி சுவாமிக்கு அப்பாலும் ஒருவரும் வராதவாறு தடுத்து நிறுத்துவதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.   அத்துடன் சேட்டுடன் வரும் பக்தர்களை சயந்தன் செம்மறியின் சிவப்பு சட்டை ரவுடிகள் மிகக் கேவலமாக ஏசித் துரத்தி வருவதாகவும் சுவாமிக்கு தொலைவில் அவர்கள் நின்றாலும் அவர்களை கலைப்பதாகவும் பக்தர்கள் தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றுது. இன்று சயந்தன் செம்மறியின் ரவுடி ஒன்று ஒலிவாங்கியால் பெண்ணை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.எனவே இந்தப் பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும், அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஓமந்தை பகுதியில் விபத்து இருவர் உயிருக்கு பலர் காயம்!


ஓமந்தை பகுதியில் விபத்து இருவர் உயிருக்கு பலர் காயம்

வவுனியா-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஓமந்த பகுதியில் கெப் வண்டியொன்றும் லொறியொன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

32 வயது ஆசிரியையை கர்ப்பமாக்கிய 23 வயது யாழ் பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்க்க முயற்சி!!


32 வயது ஆசிரியையை கர்ப்பமாக்கிய 23 வயது யாழ் பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்க்க முயற்சி!!

திருமணமாகத நிலையில் கர்ப்பமாகிய 32 வயது ஆசிரியை ஒருவர் தனது கர்ப்பத்திற்கு காரணமான 23 வயதான யாழ் பல்கலைக்கழகத்தி்ல கலைப் பீடத்தில் கற்கும் வவுனியா மாணவனை, தன்னைத் திருமணம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்த காரணத்தால் குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை வவுனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியை ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி கல்வி கற்பித்து வந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் சென்று வரும் போது யாழ் பல்கலைக்கழக மாணவனுடன் பஸ்சில் நட்பாகியதாகத் தெரியவருகின்றது. இந்த நட்பு பின்னர் தவறான நட்பாக மாறி ஆசிரியை தற்போது 5 மாத கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து ஆசிரியை குறித்த மாணவனை தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக குறித்த மாணவனின் பெற்றோரிடமும் ஆசிரியை நியாயம் கேட்டு வந்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தன்னைத் திருமணம் செய்யாது விடின் பொலிசாரின் உதவியை நாட போவதாக மாணவனை அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்தே குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது. தற்போது மாணவன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற ஆசிரியை மாணவனுடன் விடுதியிலும் தனது கணவர் என்று கூறி சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் மாணவனின் உறவுகள் கடும் கோபத்தில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Saturday, August 16, 2025

வவுனியாவில் மாணவிகளும் VSC ரியூசன் முதலாளியும் ஜல்சாவா? கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி!! நடப்பது என்ன?


 வவுனியாவில் மாணவிகளும் VSC ரியூசன் முதலாளியும் ஜல்சாவா? கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி!! நடப்பது என்ன?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 

2022 ஆம் ஆண்டு கல்வி நிலையத்துக்குள் மாணவிகளும் அந்த கல்வி நிலையத்தின் நிர்வாகியும் மதுபானம் அருந்தியதாக கூறி சீல் வைக்கப்பட்ட ஒரு கல்வி நிலையம் எப்படி மறுபடியும் ஓபன் ஆனது?

ஒருமுறை மட்டுமில்லை பலமுறை ஆசிரியர்களும் மாணவிகளும் மதுபானம் அருந்துவது என்று சொல்லி பலமுறை இந்த கல்வி நிலையத்தின் மீது முறைப்பாடுகள் நடந்துள்ளது..

இலங்கையில் இருக்கும் எல்லா தனியார் கல்வி நிலையங்களும் ஆறு மணி ஆறரை கடைசியாக 7:00 மணிக்கு மூடப்பட்டு விடும்,ஆனால் இந்த கல்வி நிலையத்தில் மட்டும் இரவு ஒன்பதரை மணி வரை வகுப்புகள் நடக்கிறது..

போதை வஸ்து கொடுத்து இந்த மாணவியை க ற்ப ழித்து கொலை செய்து கிணத்துக்குள் போட்டார்கள் என்ற சந்தேகம் அங்கிருக்கும் மக்களுக்கு எழுகிறது..

சக மாணவிகளையும் அந்த வகுப்பு நடத்திய ஆசிரியரையும் விசாரிக்குமாறு பெற்றோர்கள் போலீசார்ரிடம் முறையிட்டு இருந்தார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடக்கவில்லை..

அவ்வளவு ஆழமான கிணற்றில் ஒரு பாரமான பொருள் விழும்போது பெரிய ஒரு சத்தத்தை எழுப்பும் அந்த சத்தம் ஏன் இந்தப் பிள்ளையோடு படித்த சக மாணவிகளுக்கும் அங்குள்ள ஆசிரியர்களுக்கும் கேட்கவில்லை..?

இறந்து போன மாணவியின் பாதணிகள் கிணத்துக்கு அருகாமையில் திக்கு திசையில் சிதறி கிடக்கிறது..

தற்கொலை பண்ணியிருந்தால் அந்த காலணியை அந்தப் பெண் கழட்டி விட வாய்ப்பு இல்லை பாதணியோடு குதித்து தற்கொலை செய்திருக்கும்..

நன்றாக படிக்கக் கூடிய மாணவி எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை எப்படி இறந்து போகும்??

பல பா. லியல் குற்றங்கள் மதுபானங்கள் போதை வாஸ்து பயன்படுத்திய இந்த கல்லூர் தனியார் கல்வி நிலையத்தை எவ்வாறு மறுபடியும் திறந்து நடத்துகிறார்கள்.

யாழில் 25 பவுண் நகைகளை நண்பியிடம் கொடுத்து ஏமாந்த சுகாசினி தற்கொலை!!


யாழில் 25 பவுண் நகைகளை நண்பியிடம் கொடுத்து ஏமாந்த சுகாசினி தற்கொலை!!

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் சினேகிதி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினமும் (15) அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் இன்று (16) அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இளவாலை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

சற்று முன் நல்லுாரில் வாள் வெட்டு!! ஆலயத்தின் முன் இரத்தம் ஒழுக ஒழுக துடி துடித்து விழுந்த 4 பேர்!!


சற்று முன் நல்லுாரில் வாள் வெட்டு!! ஆலயத்தின் முன் இரத்தம் ஒழுக ஒழுக துடி துடித்து விழுந்த 4 பேர்!!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய சூழலில் இன்று (16) இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 4 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் பின்புறமாக- அரசடி சந்திக்கு அண்மையாக இளைஞர் குழுவொன்றின் மீது மற்றொரு குழு வாள்வெட்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 இளைஞர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த ஒரு இளைஞன் இரத்தம் வழிந்தோடிய நிலையில், நல்லூர் ஆலய பக்கமாக தப்பியோடி, நல்லூர் ஆலயத்தின் பின்புறமுள்ள பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக விழுந்தார்.

நோயாளர் காவு வண்டியின் மூலம் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவினர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

நல்லூரானுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!


நல்லூரானுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் இன்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, ஒரு விஷமியினால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Friday, August 15, 2025

கட்டிய கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!!


கட்டிய கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!!

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் பல கலாசார சீரழிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியது. இள வயது திருமணங்கள், பல தார திருமணங்கள், பதின்ம வயது திருமணங்கள் மற்றும் பதின்ம வயது கர்ப்பம் காரணமாக வட மாகாணத்தின் கல்வித் தரம் குறைவடைகின்றது.

இது ஒருபுறம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் இருந்து உதவி வழங்கும் போர்வையில் வருபவர்களும், இங்குள்ள குடும்பப் பெண்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ ஏதுமறியாத குழந்தைகள்தான்.

புகைப்படத்தில் உள்ள ரங்கா என்று அழைக்கப்படும் தனுராஜ் மதுரங்கி 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். திருமணம் முடித்து,

11 வயது ஆண் பிள்ளை மற்றும் 6 வயது பெ2ண் பிள்ளை என இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து புலம்பெயர் நாடான பிரான்ஸில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, தொலைபேசியில் சசி என்பவருடன் மலந்த காதல் (காமம்) காரணமாக இன்று கணவரும் குழந்தைகளும் நிர்க்கதியான நிலையில் தவிக்கிறார்கள்.

ஆனால் ரங்காவோ (மதுரங்கியோ) இரண்டு குழந்தைகளையும் கணவரையும் உதறித் தள்ளிவிட்டு, சட்டரீதியான விவாகரத்து ஏதுமின்றி, வெளிநாட்டு முகவர் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி, பிரான்ஸ் சென்றடைந்துள்ளார்.

அதுமாத்திரம் அல்லாமல், அங்கு ஏற்கனவே திருமணமான சசியுடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திவருவதுடன், ஒரு குழந்தைக்கும் தாயார் ஆகியுள்ளார்.

கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கிளிநொச்சியில் வாழும்போது, கணவரை அருகில் வைத்துக் கொண்டு, பிரான்ஸ் சசியுடன் இரவிரவாக தொலைபேசியில் காதல் லீலைகளை புரிந்தார். அதனால் கணவன் – மனைவிக்கு இடையில் அடிக்கடி பிரசரசினைகள் எழுந்தன. ஆனால் ரங்காவோ வாய் கூசாமல் கணவன் எயிட்ஸ் நோயாளி என கதை கட்டியதுடன், தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸிலும் முறைப்பாடு செய்தார். பிரான்ஸ் காதல் (காமம்) தொடர்புக்கு கிளிநொச்சியில் அரசியல் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளரும் உதவியாம். அவரின் மகன் பி்ரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான தொழில் வாய்ப்பை பிரான்ஸ் சசி வழங்கியதற்கான கைமாறாம் இது. இறுதியில் கணவன் – பிள்ளைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, பறந்துவிட்டார் ரங்கா (மதுரங்கி)

யாரை யார் நோவது?

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job