கனடாவில் காருக்குள் எரிந்த நிலையில் புதுமாப்பிளை யோகரத்தினத்தின் சடலம்!! கொலையா என சந்தேகம்!!
கனடாவில் ஸ்கார்பாரோவில் ஒரு வாகனம் தீப்பிடித்த இடத்தில் ஒருவர் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு 9:45 மணியளவில் பாஸ்மோர் அவென்யூ மற்றும் மார்க்கம் சாலைப் பகுதிக்கு ஒரு தொழில்துறை கட்டிடத்தின் பின்னால் ஒரு கார் தீப்பிடித்து எரிவதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். கருனாகரன் யோகரத்தினம் எனும் 36 வயதான குடும்பஸ்தரின் சடலமே காருக்குள் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டது. தற்போது குறித்த நபர் காருக்குள் வைத்து எரி்க்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகத்துடன் விசாரணைகளை முடக்கியுள்ளார்கள். யோகரத்தினத்தின் மனைவி கடந்த பெப்ரவரி மாதமே கனடாவுக்கு வந்து சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது






0 comments:
Post a Comment