ஒரு லட்சம் கனேடிய டொலர்களை யாழ் ரிக்டொக் யுவதியி ரிதுவிடம் இழந்த 53 வயது கமலேஸ்வரன்! மனைவி விவாகரத்து கோருகின்றார்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக்டொக் யுவதி ஒருவரிடம் தனது கணவனான கமலேஸ்வரன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கனேடிய டொலர்களை அனுப்பி ஏமாந்துள்ளதாக கமலேஸ்வரனின் மனைவி ஊடகங்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளார். கடந்த 9 மாதங்களில் தனது கணவனால் குறித்த பணம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ரிக்டொக் பிரபலமான ரிது என்ற பெயரில் ரிக்டொக்கில் உள்ள யுவதி ஒருவரை கனடாவுக்கு வரவழைப்பதற்காக யாழப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு முகவருக்கு கொடுப்பதற்காகவே குறித்த பணத்தை தனது கணவன் அனுப்பியுள்ளார் என மனைவி தெரிவித்துள்ளார்.கனடா ரொறோன்டோவில் பிரபல றியல்எஸ்டேட் தொழில் பார்க்கும் தனது கணவன் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் தெரியாமல் குறித்த யுவதியை கனடாவுக்கு முகவர் ஊடாக எடுக்க முற்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள முகவர் ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக யுவதியின் வங்கிக் கணக்கிற்கு 45 ஆயிரம் கனேடிய டொலர்களும் யுவதியின் பெயரில் உண்டியல் மூலம் 60 ஆயிரம் கனேடிய டொலர்களும் கணவன் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தனது கணவனுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை எனத் தெரிவ்து? புலம்பெயர் நாடுகளில் வாழும் குடும்பப் பெண்கள் உங்களது கணவன்மார்களின் நடத்தைகளை மிகவும் உண்ணிப்பாக அவதானிக்குமாறும் தமிழர் பிரதேசங்களில் உள்ள சில பெண்களின் கவர்ச்சிகரமான செயற்பாடுகளால் கணவன்மார்களை இழக்கவேண்டாம் எனவும் இவர் கூறும் விடயங்கள் முழுவதும் அவரது குரல் பதிவுடன் ஆதாரங்களுடன் கீழே உள்ள வீடியோ இணைப்பில் தரப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment