யுவதியின் புகைப்படங்களை ஆ*பாசப்படங்களாக மாற்றி வெளியிட்ட மற்றொரு யுவதிக்கு நீ*திமன்றம் வழங்கிய த*ண்டனை!
கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் யுவதியின் பல புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாசப் படங்களாக மாற்றி இணையத்தில் பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்றொரு இளம் யுவதிக்கு, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று ரூ. 50,000 இழப்பீட்டு உத்தரவையும் ரூ. 5,000 அபராதத்தையும் விதித்தார்.
பாதிக்கப்பட்டவரின் படங்களை பேஸ்புக்கிலிருந்து பிரித்தெடுத்து டிஜிட்டல் முறையில் ஆபாசப் படங்களாக மாற்றி அந்தப் படங்களை இணையத்தளங்களில் விநியோகித்த இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ. 2,500 அபராதமும் ரூ. 25,000 இழப்பீடும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ. 50,000 செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று வழக்கு விசாரிக்கப்பட்டபோது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, குற்றவியல் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
சந்தேக நபர் கொழும்பு மகளிர் பாடசாலையின் முன்னாள் மாணவி என்றும், தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தனியார் பரீட்சார்த்தியாகத் தோற்றுவதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.






0 comments:
Post a Comment