சந்தேகம்! வத்சலாவை கடித்தே கொன்ற கணவன்!
பணி செய்யும் இடத்தில் கள்ள தொடர்பு என சந்தேகித்து வேலையை விடுமாறு கணவன் சொல்லியும் தனது வேலையை விட முடியாதென, மறுத்த மனைவியை ஆத்திரத்தில், கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளதால் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறே இப்பயங்கர முடிவுக்கு வந்ததுள்ளது.
மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொலை மற்றும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறதும் குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment