நான் உன் அப்பாவா இல்லையா என்பது யாருக்குத் தெரியும் என தன்னிடம் மன்னர் சார்லஸ் வேடிக்கையாக கூறியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஹரி.
பாதுகாவலருடன் தவறான உறவில் இருந்த டயானா
இளவரசி டயானா, 1986 முதல் 1991 வரை, தனது பாதுகாவலரான மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் தவறான உறவில் இருந்துள்ளார். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவரே இதைக்குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்நிலையில், இளவரசர் ஹரியின் தலைமுடி, சார்லசைப்போல இல்லாமல், ஜேம்ஸ் ஹெவிட்டின் தலைமுடியைப்போல இருப்பதாகவும், அதனால், அவருக்கும் ஜேம்ஸுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் எழுதியுள்ளன.
அவர் இறந்தும், அந்த விடயத்தால் இளவரசர் ஹரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து அவர் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் ஹரி 1984ஆம் ஆண்டு பிறந்தார். அதற்குப் பிறகுதான் டயானா ஜேம்ஸ் ஹெவிட்டை சந்தித்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிந்தும், ஊடகங்கள் அதைக் குறித்து எழுதுவதில் மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ள ஹரி, தனது DNAவை எப்படியாவது சேகரிக்கவேண்டும் என்று கூட சில ஊடகவியலாளர்கள் முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மகனுடைய பிறப்பைக் குறித்து மோசமாக ஜோக்கடித்த மன்னர் சார்லஸ்...
இப்படி பல ஆண்டுகளாக அந்த விடயம் ஹரிக்கு மனவேதனையை அளித்துவந்த நிலையில், ஒருநாள் மன்னர் சார்லசே அதைக் குறித்து ஜோக்கடித்தாராம்.
நான் உன் உண்மையான அப்பாவா இல்லையா என்பது யாருக்குத் தெரியும் என்று கூறிய சார்லஸ், ஒருவேளை உன் உண்மையான அப்பா Broadmoorஇல் இருக்கக்கூடும் இல்லையா என் அன்பு மகனே என்றாராம். அதாவது, ஹரியையும் ஜேம்ஸ் ஹெவிட்டையும் இணைத்து அவர் ஜோக்கடித்தாராம், விழுந்து விழுந்து சிரித்தாராம்.
அதை அவர் வேடிக்கையாகக் கூறினாலும், அது ஒரு மட்டமான ஜோக்காக இருந்தது என்கிறார் ஹரி.







0 comments:
Post a Comment