நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, November 26, 2023

ஜப்பானில் இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் உயிரிழப்பு



ஜப்பானில் இரண்டு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை - தெவிநுவர பிரதேசத்தினை சேர்ந்த இசுரு ஷாலிந்த என்ற 26 வயதுடைய இளைஞனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாடு சென்ற குறித்த இளைஞன் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஜப்பானில் இலங்கையர்கள் ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியைக்காண நண்பர்களுடன் சென்றுள்ளார்.




மரணத்திற்கான காரணம்
இதன்போது இலங்கையை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஷாலிந்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷாலிந்தா துரதிஷ்டவசமாக நவம்பர் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஷாலிந்தவின் சடலம் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தெவிநுவரவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (26.11.2023) பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment