நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, November 14, 2023

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு



வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் இன்று(14.11.2023) நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக பொதுமக்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டுள்ளனர்.

கல்வி அலுவலக மலசலகூடத்தில் சடலம்
கல்வி அலுவலக மலசலகூடத்தில் சடலம்
மேலதிக விசாரணை
குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 Recovery Of Dead Body Of A Woman Vavuniya

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job