நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, November 14, 2023

செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்: பெற்றோர் கோபம்



நீதிமன்ற உத்தரவுப்படி செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானியக் குழந்தை மரணமடைந்தாள். அவளது பெற்றோர், தாங்கள் கோபத்திலிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை
எட்டுமாதக் குழந்தையான இண்டி (Indi Gregory), ஒரு அபூர்வ மைட்டோக்காண்ட்ரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய உடலிலுள்ள செல்களால் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலை இருந்தது.

இங்கிலாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் இனி பயனில்லை, ஆகவே, அவளுக்கு கொடுக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என மருத்துவமனை முடிவு செய்தது.அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்தது.

 Critically Ill Baby Dies

குழந்தை இண்டியின் பெற்றோர், தங்கள் குழந்தையை இத்தாலியிலுள்ள Bambino Gesu மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க பிரித்தானிய அரசிடம் அனுமதி கோரினார்கள்.

இந்த தகவல் அறிந்த இத்தாலி பிரதமர், உடனடியாக குழந்தை இண்டிக்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டினார். நாடாளுமன்றத்தில், குழந்தை இண்டிக்கு அவசர அவசரமாக இத்தாலியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரித்தானியா எடுத்த மோசமான முடிவு
ஆனால், அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிரித்தானியா, குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்தியே தீருவது என முடிவு செய்தது.

ஞாயிற்றுகிழமை, குழந்தை இண்டிக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக, அவளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த Christian Concern என்னும் தொண்டு நிறுவனத்தின் 

பெற்றோர் அருகிலிருக்க, இண்டியின் செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு சுவாசிப்பதை நிறுத்திய இண்டி, மீண்டும் சுவாசிக்கத் துவங்கியதாகவும், கடுமையாகப் போராடிவருவதாகவும் இண்டியின் தந்தை தெரிவித்திருந்தார்.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்
இந்நிலையில், நேற்று, அதாவது, திங்கட்கிழமை அதிகாலை இந்திய நேரப்படி, 7.15 மணியளவில், இண்டி மரனமடைந்துள்ளாள். இண்டியின் தாயாகிய Claire Staniforth தன் மகளைக் கட்டியணைத்துக்கொண்டிருக்க, அவள் சுவாசிப்பதை நிறுத்தியதாக இண்டியின் தந்தை Dean Gregory தெரிவித்துள்ளார்.

இண்டியின் வாழ்வு அதிகாலையில் முடிந்துபோனது என்று கூறியுள்ள அவர், தானும் இண்டியின் தாயும் மனமுடைந்துபோயிருப்பதாகவும், தாங்கள் கோபத்தாலும் வெட்கத்தாலும் ஆட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


மருத்துவ அமைப்பும் நீதிமன்றங்களும் எங்கள் மகள் வாழ்வதற்கான வாய்ப்பைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், அவள் தன் சொந்த வீட்டில் கௌரவத்துடன் மரணிக்கும் வாய்ப்பையும் பறித்துக்கொண்டன என்று கூறியுள்ளார் அவர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job