நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, November 26, 2023

2024 இல் நடக்கப்போவது என்ன ..! அச்சம் தரும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு



பிறக்க இருக்கும் 2024 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன என்பது தொடர்பாக தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் அதிர வைத்துள்ளன.

இதன்படி புதிய ஆண்டில் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்றும் ஆசியாவில் போர் வெடிக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று நிகழ்வுகள் துல்லியமாக கணிப்பு
புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் ஹிட்லரின் எழுச்சி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோன் எஃப். கெனடியின் படுகொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார். மேலும் பல நூற்றாண்டுகளுக்கு இவர் தீர்க்க தரிசனங்களை கூறியுள்ளார்.



ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு மற்றும் அவரது வயது வரை துல்லியமாக கணித்துள்ளார். நாஸ்ட்ரடாமஸின் பெரும்பாலான கணிப்புகள் பலித்துள்ளதால் அவரது கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.


தற்போது 2023 ஆம் ஆண்டு விடைபெற்று 2024 ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில் நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வெளியேற்றப்படவுள்ள தீவுகளின் ராஜா
அவரது கணிப்பின் படி மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவி விலகுவார், ஒரு பெரிய போர் உருவாகும், மற்றும் வெள்ளத்தால் பெரும் பஞ்சம் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அதாவது "தீவுகளின் ராஜா" கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் யார் அந்த அரசர் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் கிங் சார்லஸ் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.


மேலும் தீவுகளின் ராஜா, "பலத்தால் விரட்டப்படுவார்" என்றும், அவருக்குப் பதிலாக "ராஜா என்ற அடையாளமே இல்லாதவர்" நியமிக்கப்படுவார் என்றும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமான சுனாமி 
 ஒரு கொடூரமான சுனாமி மற்றும் "பெரும் வெள்ளம்" ஆகியவை உலகின் சில பகுதிகளை அழிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பேரழிவு தரும் "பெரும் பஞ்சம்" ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார்.



பூமி மேலும் வறண்டு போகும் என்றும் பெரும் வெள்ளம் ஏற்படும் என்றும் சுனாமி விவசாய நிலங்களை பாதித்து, கடுமையான பஞ்சத்திற்கு வழி வகுக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "சிவப்பு எதிரி பயத்தால் வெளிர் நிறமாகிவிடுவான். பெரும் சமுத்திரத்தை அச்சத்தில் ஆழ்த்துகிறான்." என்றும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.


 மாற்றப்படவுள்ள பாப்பரசர்
அடுத்த ஆண்டு 88வது வயதை எட்ட இருக்கும் போப் பிரான்சிஸ், மாற்றப்படுவார் என்றும் கணித்துள்ளார். அதில் "மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் தேர்ந்தெடுக்கப்படுவார்." என நாஸ்ட்ரடாமஸ் தெரிவித்துள்ளார்.



நாஸ்ட்ரடாமஸின் முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் பலித்துள்ள நிலையில் வரும் புத்தாண்டுக்கான அவரது கணிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job