50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, March 28, 2025

வட இந்து ஆரம்பபாடசாலையில் கொலசிப் ஆசிரியர் தில்லைவாசன் பொலிசாரால் கைது செய்யப்பட்டது ஏன்?


வட இந்து ஆரம்பபாடசாலையில் கொலசிப் ஆசிரியர் தில்லைவாசன் பொலிசாரால் கைது செய்யப்பட்டது ஏன்?

தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கும் வடமராட்சி இந்து ஆரம்பபாடசாலை…. எதற்கெடுத்தாலும் தனக்குச் சார்பான சில பெற்றோர்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் அதிபர்… 10 வயது மாணவியை கடுமையாக தாக்கினாரா ஆசிரியர் தில்லைவாசன்?  வடமராட்சி வலயக் கல்வித்திணைக்களப் பணிப்பாளர் குடியும் குடித்தனமுமாக இருக்கின்றாரா? இந்த பாடசாலை்யின் சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்காதா?

நேற்று நடந்த சம்பவம் இது…..

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு இந்த ஆண்டு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலை விடுமுறை நாட்களில் மேலதிக கற்றல் செயற்பாட்டுக்காக கற்பித்த ஆசிரியர் ஒருவர் யாழ் வடமராட்சியில் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கற்பிக்கும் தில்லைவாசன் என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார், மேலதிக வகுப்பிற்காக வந்த மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர் விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதும் அதை திருத்தி சரியானதாக குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை போட்டுள்ளார்.

இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டிததுடன் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்றுகூடியிருந்தனர். பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தங்களது பணிக்கடமைகளை விட மேலதிகமாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக பாடுபட்ட ஆசிரியர் குறித்த மாணவியை கடுமையாகத் தாக்கினாரா? அல்லது மெதுவாகத் தாக்கினாரா என்பது தொடர்பாகவும் குறித்த மாணவிக்கு காயங்கள் எப்படி உள்ளன என்பது தொடர்பாகவும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைகளின் படியே ஆசிரியருக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும் எனத் தெரியவருகின்றது.

ஏற்கனவே குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து ஊடகங்களில் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் வெளியாகியிருந்தன.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job