
பண்டாரவன்னியன் காலத்து புதைபொருளை மல்லாவியில் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள மல்லாவி பாண்டியன்குளம் பிரதேசத்திலுள்ள "செல்வபுரம்" எனும் கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பலகோடி ரூபா பெறுமதி மிக்கது எனக் கருதப்படும் புராதன பொக்கிஷங்களை அண்மையில் திருடிவிட்டார்கள்.
தமிழனின் வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும், அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இவர்களை பிடிப்பதற்கு புதைபொருள் ஆராட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கூறியுள்ளனர்.
யாழ்ப்பாண ராச்சியத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் மிகுந்த கவலையுடன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment