ஜனாதிபதியாக்கிய பிரதமரை புறந்தள்ளிய மைத்திரியின் அரசியல் நாகரிகம் குறித்து அமைச்சர் றவூம் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த செயற்பாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை பதவியேற்றுள்ள விடயம் தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது ஒரு முக்கிய விடயம் இதனால் இன்று இரவே நான் நாடு திரும்புகின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரும்பியக் கையோடு கட்சியின் மேலிடத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டுவர ரணிலினதும், ஐக்கிய தேசியக் கட்சியும் அதிக பாடுப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் அரசியல் நாகரிகம் குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் அமைச்சர் றவூவ் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment