அம்மாச்சி பெயர் மாற்றம் விக்கி சீற்றம்
தங்கள் அன்புத் தாயாராகிய இலட்சுமிப் பிள்ளையின் பெயரை சிங்கள ஆட்சியாளர்கள் கோவிப்பார்கள் என்ற காரணத்தினால் பொடிமெனிக்கே என்று மாற்றக்கூடியசிந்தனையா ளர்களே இன்று அம்மாச்சி என்ற பெரை மெல்ல நீக்கி பாரம்பரியஉணவகம் என மாற்ற முனைந்திருக்கின்றார்கள் .
இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்தார்.
காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடத்திறப்புவிழா நேற்று மாலை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது:
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும் போது அவர்களின் சம்பாசனைகள் ஜேர்மன் மொழியில் இருக்கும். அதேபோன்று இரண்டு ரஷ்ய நாட்டுநபர்கள் சந்திக்கும் போது ரஷ்ய மொழியில் பேசுவார்கள். இரண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கிலமொழியில் பேசுவார்கள். ஆனால் இரண்டு தமிழர்கள் ஒருவரை ஒருவர் வடகிழக்கிற்கு வெளியில் சந்திக்கும்போது தமிழில் பேசமாட்டார்கள். மாறாக ஆங்கிலத்திலோ அல்லது பிறிதொரு மொழியிலோதான் பெரும்பான்மையானவர்கள் பேசுவார்கள்.
அதேபோன்று அம்மாச்சி என்ற பாரம்பரியத் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் சிலருக்கு விருப்பமில்லை. மாறாக “ஹெலபொஜன்” என்ற சிங்களப் பதத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று துடியாய் துடிக்கின்றார்கள். எமது அலுவலர்களும் பிரதி அமைச்சரைப் பகைக்கக் கூடாது என்ற அடிப்படையில் அம்மாச்சி என்பதற்குப் பதிலாக ஹெலபொஜூனுக்குப் பதில் “பாரம்பரிய உணவகம்” என மாற்றிவிட்டார்கள்.
தங்கள் அன்புத் தாயாராகிய இலட்சுமிப் பிள்ளையின் பெயரை சிங்கள ஆட்சியாளர்கள் கோவிப்பார்கள் என்ற காரணத்தினால் பொடிமெனிக்கே என்று மாற்றக்கூடிய சிந்தனையாளர்களே இன்று அம்மாச்சி என்ற பெயரை மெல்ல நீக்கி பாரம்பரிய உணவகம் என மாற்ற முனைந்திருக்கின்றார்கள்.
நான் இறுக்கமாகக் கூறிவிட்டேன் அம்மாச்சி என்ற பெயர் காணப்படின் மட்டுந்தான் நான் இந்தத் திறப்பு விழாவிற்கு வருவேன் என்று. எமது பகுதியில் எமது மாகாணசபையின் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உணவகத்திற்கு அன்பு கலந்த அம்மாச்சி என்ற பெயரை வைப்பதற்கு இவ்வளவு தடைகள் எனின் ஏனைய விடயங்கள் பற்றிக் கூறத் தேவையில்லை.
ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் மற்றும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத் திராணியற்றவர்களாக அரசின்ன் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள். நான் சிங்கள சகோதரர்களைக் குறைகூற வரவில்லை. என் தமிழ்ச் சகோதர சகோதரிகளின் வருத்தத்திற்குரிய செயற்பாட்டையே கூறவருகின்றேன் எ-ன்றார்.
இதேவேளை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரால் நேற்றுத் திறந்து வைக்கப்பட்ட உணவகத்துக்கு ‘‘பாரம்பரிய உணவகக் கட்டடம்’’ என்றே கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் பாரம்பரிய என்ற சொல் அழிக்கப்பட்டு உணவகக் கட்டடம் என்றே திறந்து வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் அங்கு ஆற்றிய உரையில் அம்மாச்சி உணவகம் என்ற பெயர் இருக்கா விட்டால் தாம் இந்த உணவகத்தை திறந்து வைக்கமாட்டேன் என்று கூறியிருந்தாலும் அம்மாச்சி என்ற பெயர் பொறிக்கப்படாத கட்டடத்தையே திறந்து வைத்தார்.
0 comments:
Post a Comment