முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.
இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment