முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து சற்று நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய அரச ஊடக நிறுவனங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
பல்வேறு பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீன தொலைக்காட்சி செய்தி சேவை பிரிவுக்கு சென்ற குண்டர்கள் அங்குள்ள ஊழியர்கள் சிலரை வெளியே விரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக நாடே நிலை குலைந்து போயுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment