தமிழ் சினிமாவில் தற்போது அதிக வரவேற்புள்ள இளம் நடிகை நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதிக வேலைப்பளு காரணமாக அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போவதாக, நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டக்கோழி 2-ம் பாகம் மற்றும் சர்கார் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இந்நிலையில் தற்போது இவருக்கு ஒரு மலையாளப்படமும் கைவசம் உள்ளது.
''தாம் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்து பொழுதைக் கழிப்பேன்'' என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment