கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உணவகங்கள் நீதி அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் நடத்தி செல்லப்படுகின்ற குறிப்பிடத்தக்கது.
குறித்த உணவகத்தில் இன்று காலை உணவு பெற்றுக் கொண்ட தேசிய பத்திரிகையின் நீதிமன்ற ஊடகவியலாளர் அவ்வாறான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
காலை உணவிற்காக பெற்றுக் கொண்ட உணவில் மீன் கறியில் புழு இருந்ததாக அவர் நீதி அமைச்சின் நலன்புரி சங்கத்தின் செயலாளருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கு முன்னரும் பலர் இவ்வாறு முறைப்பாடு செய்த போதிலும் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக குறித்த ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment