இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றமானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. என தனியார் செய்தி ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இலங்கை அரசியல் மாற்றம் பிரதான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையில், இலங்கையுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நாடுகள் மற்றும் இலங்கை தொடர்பாக கரிசனை கொண்டுள்ள நாடுகள் இவ்விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்கியுள்ளாரென தனியார் செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசியல் நாடகம் வெளிப்பட்டுவிட்டதென தனியார் செய்தி ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பல முக்கிய தனியார் ஊடகங்கள் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றத்தை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளன.
அதேபோன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்தையும் குறித்த ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் பின்னர் இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் இணைந்து ‘நல்லாட்சி’யை நிறுவின. மூன்று வருடங்கள் கடந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் பனிப்போர் ஏற்பட்டதோடு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த, ஆட்சியை கவிழ்ப்போம் என தொடர்ச்சியாக கூறி வந்தார்.
இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று மாலை அறிவித்த சில நிமிடங்களில், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றார்.
மேலும், இச்செயற்பாட்டிற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, குறிப்பாக அரசியலமைப்பிற்கு முரணாகவும் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளதென ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென குறிப்பிட்டுள்ள ரணில், இந்த நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் சகல கட்சிகளும் அவசரமாக தமது உறுப்பினர்களை கூட்டி கலந்துரையாடி வருவதோடு, தமது முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.
அந்தவகையில் குறிப்பாக நாளைய தினம் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும், இலங்கை அரசியலில் முக்கிய காலகட்டம் என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment