
ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதி மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது.
இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன்,
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment