நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 5, 2018

சற்றுமுன் வெளியாகியது மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள்


2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது பல மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

   
       
   
  .

அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, குருணாகல், கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப்புள்ளி 168 என்பதுடன், தமிழ் மொழி மூலத்திற்கான வெட்டுப்புள்ளி 165 ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 166 வெட்டுப்புள்ளியெனவும், மொனராகலை, பதுளை, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம் போன்ற மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 165 ஆகும் என தெரியவருகிறது.

   
       
   
 

நுவரெலியா மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 163 எனவும், யாழ். மற்றும் முல்லைத்தீவிற்கான வெட்டுப்புள்ளி 164 எனவும், கிளிநொச்சிக்கான வெட்டுப்புள்ளி 163 எனவும், மன்னார் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 162 எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment