பல மில்லியன் பெறுமதியான திட்டத்தை இலங்கை அரசு இரத்து செய்திருந்த நிலையில், மலேசிய நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது.
150 மில்லியன் டொலர் செலவில் காற்று / சூரிய ஹைபரிட் மின் உற்பத்தித் திட்டத்தை இரத்து செய்வதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ல், இணக்கசபை வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஐ.சி.எஸ்.ஐ.டி. பணி செயலகம் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. இதில் இலங்கையின் எரி சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் பிரதிவாதியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளரின் சூரிய ஹைபரிட் மின் உற்பத்தி ஆலை ஒன்றை கட்டியெழுப்ப முதலீட்டாளர் திட்டத்தை இலங்கை மின்சாரசபை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை பின்னர் 2016 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் இரத்து செய்தது. இதற்கிடையில் முதலீட்டாளர் ஏற்கனவே 22 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்துள்ளார்.
ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் காலதாமதப் படுத்தியமையாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment