அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் தான் மாத்திரமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம்
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘இவ்வாறான சுற்றாடல் மாநாடுகளை நாட்டின் பல மாவட்டங்களிலும் நடாத்தி வருகின்றோம்.
அதே போன்று போதைவஸ்துக்கு எதிரான மாநாடுகளையும் பல மாவட்டங்களிலும் நடாத்தி இருக்கின்றோம். சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான பல மாநாடுகளையும் நடாத்தி இருக்கின்றோம்.
அந்த அனைத்து வேலைத்திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்று கொண்டமை குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே முதல் முதலாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது நிதி அமைச்சினையே தெரிவு செய்து கொண்டனர்.
ஆனால்
எனக்கு பணம் தேவையில்லாத காரணத்தினாலேயே தான் நான் நிதி அமைச்சைக்கூட பெற்றுக்கொள்ளவில்லை. இன்னும் ஒரு வருடங்களுக்கு பிறகு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு எனக்கு இருக்கும் அதிகாரங்கள் கூட இருக்க போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment