This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 30, 2018

கொழும்பு அரசியலின் புதுக் கதையும் முக்கோணப் போரும்! மைத்திரியால் வெளியான சர்சை


அதிபர் மைத்திரி தெரிவித்துள்ள சர்ச்சை மிகு கருத்து

வடக்கில் நடந்த போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அமெரிக்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில், இலங்கை சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதனால் தான், போர்க்காலத்தில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நாட்டில் இருக்கவில்லை.

அவர்கள் நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றும் போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த இறுதிக் கட்டத்தில் இவர்கள் எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது எவருக்கும் தெரியாது.

ஆனால் எனக்குத் தெரியும் என்றும் எனவே, போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட எனக்குத் தெரியும் என்றும் அதிபர் மைத்திரி தெரிவித்துள்ளார்.

அதிபரின் இந்த உரை மகிந்த, கோத்தபாய, சரத்பொன்சேகா ஆகியோரிடையே சூட்டைக் கிளப்பியுள்ளது. தாங்கள் எங்கும் ஓடி ஒழியவில்லை என்று முன்னாள் அதிபர் மகிந்தவும் தானும் உத்தியோகபூர்வ பயணமாகவே நாட்டில் இல்லை என்றும் கோத்தபாய நாட்டில் இருந்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதே போன்று முன்னாள் அதிபர் மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் அதிபர் மைத்திரியின் உரைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது வடக்கில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் சென்னையில் இருந்து விமான மார்க்கமாக கொத்தணிக் குண்டுகள் மூலமாக கொழும்பு நகரை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் அதனால் அப்போதைய அதிபர் மகிந்த பாதுகாப்பு செயலர் கோத்தபாய மற்றும் அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் நாட்டில் இருக்கவில்லை என்றும் அத்துடன் தான்தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றும் ஒரு ஒப்புதல் வாக்கு போன்று அந்த பேச்சு அமைந்துள்ளது.

அப்போது புலிகளின் கையில் சிறிய ரக விமானம் இருந்தது உண்மைதான். அப்போது புலிகள் தங்களது சிறிய ரக விமான தாக்குதல் செய்திருந்தார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தோ அல்லது சென்னையில் இருந்தோ புலிகள் ஒரு போதும் விமான தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.

இந்தியாவின் சகல விமான நிலையங்களும் மத்திய அரசின் பாதுகாப்பு படைகளால் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ளது இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு போதும் எந்தவொரு தாக்குதலும் நடத்துவதற்கான ஒரு வீத வாய்ப்பும் ஒரு போதும் இருந்ததில்லை.

இந்தியாவின் “ ராடார் ” கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். அதனால் இந்தியாவுக்கு தெரியாமல் இந்திய வான்பரப்பில் எந்தவொரு விமானமும் பறக்க முடியாது.

ஆனால் அப்போது புலிகள் வான் தாக்குதல் செய்வார்கள் என்ற ஒரு அச்சம் இருந்து வந்தது.

புலிகளை அழிப்பதில் அப்போதைய சோனியா, மன்மோகன் அரசு தீவிரமாக செயல்பட்ட நிலையில் அப்போது பாக்குநீரிணை வழியாக வடக்கு நோக்கி வந்த புலிகளின் அதிநவீனரக பல ஆயுதக் கப்பல்களை இலங்கை நேவிக்கு காட்டிக் கொடுத்து அழித்த நிலையில் இப்படியான விமான தாக்குதலை இந்தியாவில் இருந்து செய்வதற்கு ஒரு போதும் இந்தியா விட்டிருக்காது என்பது நிச்சயம்.

முக்கோணப் போர் ! மறுக்கும் மகிந்த கோதபாய சரத்பொன்சேகா

போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், இலங்கையின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கொண்டதாக இலங்கை அதிபர் கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

அப்போது இராணுவத் தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா, நியூயோர்க்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்திருக்கிறார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணமாகவே வெளிநாடு சென்றிருந்தார். அவர், 2009 மே 16ஆம் நாள் நாடு திரும்பினார். அதிகாரபூர்வ விடயமாக நானும் சீனாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எந்த அழுத்தங்களாலும் நாங்கள் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.

அந்தக் கட்டத்தில் எல்லாமே மிக கவனமாக திட்டமிடப்பட்டிருந்தது. விளைவு நிச்சயம் உறுதியாகி விட்டது. போரின் இறுதி இரண்டு வாரங்களில், கோப்ரல்களும் சார்ஜன்ட்களும் தான் நிறைய வேலை செய்தனர். களத்தில் எமது கட்டளைகளை அவர்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் இரண்டரை ஆண்டுகள் நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை. இரண்டு ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட போரின் சிக்கல்களை இரண்டு வாரங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

போரின் இறுதி இரண்டு வாரங்களிலும், கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டுக்குச் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த மற்றும் கோத்தபாய மீது சரத்பொன்சேகா பெருத்த கடுப்பில் இருந்தாலும் இப்போது அதிபர் மைத்திரி தெரிவித்துள்ள இந்தக் கருத்தினால் அதிபர் மைத்திரிக்கு எதிரான கருத்துக்களை இந்த 3 பேரும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விடயத்தில் இந்த 3 பேரும் எதிர்வரும் காலங்களில் அதிபர் மைத்திரிக்கு எதிராக ஒரு முக்கோண கருத்துக்களை எதிர் தாக்குதலாக தொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை, அத்துடன் இந்த விடயம் பெரும் பேசு பொருளாகவும் அமையப் போகின்றது..

கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களின் அதிரடி செயற்பாடு! வியந்து போன பொலிஸார்


கிளிநொச்சியில் துணிச்சல் மிக்க இளைஞர்களின் செயற்பாடு குறித்து பொலிஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் இளைஞர் குழுவொன்றின் அதிரடி செயற்பாடு காரணமாக, சட்டவிரோத செயற்பாடு ஒன்று தடுக்கப்பட்டிருந்தது.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றை விரட்டிபிடித்த இளைஞர்கள் அதனை பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.

கிளிநொச்சி,

   
       
   
  மலையாலபுரம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரே இந்த அதிரடி செயற்பாட்டில் நேற்று ஈடுபட்டனர்.

இந்நிலையில் லொறியில் கொண்டு சென்ற கஞ்சா தொகையை கைப்பற்ற உதவிய இளைஞர்களுக்கு பொலிஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிக வேகத்துடன் பயணித்த சிறிய லொறி ஒன்று தொடர்பில் சந்தேகமடைந்த இளைஞர்கள், அந்த லொறியின் பின்னால் துறத்தி சென்றுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த லொறி கிளிநொச்சி மலையாலபுரம் பிரதேசத்தின் குறுக்கு வீதியின் ஊடாக பயணித்துள்ளது.

எனினும் தொடர்ந்து இளைஞர்கள் துறத்தி சென்ற போது, சந்தேக நபர்கள் லொறியில் இருந்து பொதியை அந்தப் பகுதியில் வீசியுள்ளனர். லொறியையும் அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல்

   
       
   
  வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்ட பொலிஸார் 6 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன், லொரியையும் மீட்டனர்.

குறித்த இளைஞர்களின் அவதானம் காரணமாக சட்டவிரோத நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.







ஜா - எல யில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தவறுதலாக மேற்கொள்ளப்பட்டதாம் ?





ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தவறுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

காரொன்றில் சென்ற 40 வயதான பெண் மீதே மற்றுமொரு காரில் வந்த இனந்தெரியாத நபரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

   
       
   
 
   
       
   
  சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பெண்ணின் 8 வயதான மகளும் அவருக்கு அருகில் இருந்துள்ளார். சம்பவத்தில் குறித்த சிறுமிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பேலியாகொடை பொலிஸ் நிலையத்திற்கு மினுவங்கொடையை சேர்ந்த பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவர் சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் குறித்த பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் பயணித்த காரும் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் காரும் தோற்றத்தில் ஒத்திருந்த நிலையில், துப்பாக்கிதாரிகள் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு சென்று திரும்பியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரை இலக்குவைத்தே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்னேஸ்வரன் இல்லை, கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக புதியவர்! சுமந்திரன் அறிவிப்பு


எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு

   
       
   
  திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.

அத்துடன், மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். எனினும், ஆளுனரின் கையில் இன்னமும் நிதி உள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கருத்து மோதல் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை

   
       
   
  முன்வைத்து வருகின்றனர்.

இதனால் வடமாகாண முதலமைச்சர், தனித்து அல்லது புதிய கூட்டணி ஒன்றில் ஊடாக தேர்தலில் போட்டியிட கூடிய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவதுடன், ஒரு தரப்பு முதலமைச்சருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே, எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பழ்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் உள்ளத்தை உருக்கும் கவிதைகள்…


   
       
   
  விந்தை உலகில்

மதி நிறைந்த மனிதனின்

விதி வலைக்குள் சிக்குண்டு

விதவிதமான மனிதர்களை

விசித்திரமாய் பார்த்த வண்ணம்

நகர்த்துகின்றோம் எம் நாட்களை…

நாமும் கைதிகள் தான்……

வித்தியாவை” வீணாக்கி

“சேயாவை” சிதைத்து

“நந்தினியை”நாசமாக்கி

ஒன்றுமறியா எங்கள்

செல்ல மகள் “ஹாசினியை” தின்று

இன்னும் எத்தனையோ பூக்களை கொன்றொழித்த அத்தனை காமுகர்களையும் என்ன செய்தோம் நாம் ??

பெண் மகவாய் இவள் பிறந்தது குற்றமா??

பெண் பிள்ளை வேண்டுமென

இவளை பெற்றது குற்றமா?

சிறு மொட்டொன்று மலரும் முன்னே அதன் இதழ்களை கூட பிய்த்தெறிய மனம் வரா மனிதர்களுக்கு மத்தியில் ….

மொட்டென்ன? பூவென்ன? அத்தனையும் எம்மால் தான் அழிக்கப்பட வேண்டும் என கங்கணம் கட்டித்திரியும் காடையர்களே………

எங்கிருந்தடா வந்தீர்கள் நீங்களெல்லாம் ?

தாயின்றி , தங்கையின்றி , தாரமுமின்றி தான் தரணியில் வாழ்கின்றீரோ???

விழுந்த பல் கூட சரியாக முளைத்திராத அந்த சின்னஞ்சிறு மொட்டு

அப்படி என்னதான் செய்து விட்டது உனக்கு?

கள்ளமில்லா சிரிப்பை கண்ணுக்குள்ளே வைத்திருந்தாயே ஹாசினி குட்டியே..

வெள்ளை உள்ளத்தால் வித்தைகள் பல புரிந்தாயே ……

அத்தனையும் உன் உடலுடன் சேர்ந்து

கருகிப்போனதன் காரணம் தான் என்னவோ??

உன் நற்குணங்களில் ஒன்றாவது அழிக்கும் சக்தியாய் மாறியிருக்க கூடாதா??

அப்பிணம் தின்னும் கழுகு உன்னை சிதைக்கையிலே …….

உன்னை யாரென்றும் அறிந்திராத எமக்கு கூட ..

உன் இறப்பு எத்துணை துன்பத்தையம்மா தருகிறது?

ஓ…மன்னித்து விடு மகளே ….

இது இறப்பல்ல “சிதைப்பு” .

நாமெல்லாம் உனக்காக கலங்கினாலும் …..

நான்கு வரிகளை எழுதினாலும் …

அவையெல்லாம் அர்த்தமற்றவையே ..

இப்பொழுது நீ இறைவனடியில் இருப்பதால்

உன்னிடம் நாம் ஒன்று இறைஞ்சுகின்றோம் ..

மறுபிறப்பென்ற ஒன்று உண்டென்றால் …..

மீண்டும் மண்ணுக்கு வா ..

மகளாய் வாழ்வதற்கல்ல……

உன்னை சிதைத்தவனையும்

உன் சகோதரிகளை நாசம் செய்தவர்களையும் வதம் செய்து பெண் இனத்தை காக்கும் தெய்வமாய்……

ஹாசினி கடவுளாய் ………..

உன்னை காண ஆசை கொள்கிறோம் ….

வருடம் ஒன்றாகி விட்ட்து, உன் கதை கேட்டு, இன்று நீயும் இல்லை, உன் கதையும் இல்லை சகோதரியே….

நான் கவிஞருமல்ல,இது கவிதையுமல்ல…….

அன்பெனும் கூரிய ஆயுதத்தால்

கொடூரமாக தாக்கப்பட்ட

ஒரு பெண்ணின் புலம்பலும் கண்ணீரும்…..

பெண்ணாய் பிறந்ததொன்றே யாம் செய்த பெரிய பாவம் என

சில பெண்கள் புலம்பிய போது

பெரிதாக உணரவில்லை

அதன் அர்த்தமதை….

அர்த்தமது ஆழமாக உணரப்பட்டதால்

இப்போது இயம்புகின்றேன்…..

“நல்லவன்” என்ற தகுதி மட்டுமே போதுமாயிருந்தது….

நான் உன்னை தேர்ந்தெடுப்பதற்கும்

நீ என்னுள் நிரந்தரமாய் ஐக்கியமாவதற்கும்….

   
       
   
  அத்தகுதியும், உன் மேல் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையுமே

இன்றென்னை அணுஅணுவாய்

கொல்கிறது……

அதீத அன்பு அருகதையற்றோர் மீது

காட்டப்படுவதால் தானோ என்னவோ

அது ஆயுதமாய் எம்மீது எறியப்படுகிறது…

அன்பே உருவானவர்கள் நாமெல்லோரும்...

இதில் ஆணென்ன பெண்னென்ன

சமத்துவமறிந்து சமமாய் நடத்த தெரியாதெனின் அவர் மானிடரே அல்லர்.

உங்களுக்கு உண்மையாய், உயிராய்

இருக்கும் பெண்ணவளை

உயர்வாய் எண்ணாவிடினும்

ஓர் உயிருள்ள ஜீவனாய் உணர்வுள்ள உயிராய் மதியுங்கள்...

அவள் உயிர் பிரியும் வேளையிலும்

உன்னை எண்ணி மட்டுமே கலங்குவாள்…

மாறாக அவளை கள(ல)ங்கப்படுத்த எண்ணினால், இப்பிறவியிலல்ல எப்பிறவியிலும்

எல்லையில்லா அவள் அன்பை

எள்ளளவும் பெற மாட்டீர் என்பது

திண்ணம்...

சென்னையிலிருந்து கொழும்பை தாக்க விடுதலைப்புலிகள் திட்டம்! இந்தியாவின் முக்கிய கருத்து


2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள்

   
       
   
  சென்னையில் இருந்து விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதல்களை நடத்தவிருந்தனர் என்ற செய்தியை இந்திய தரப்புக்கள் நிராகரித்துள்ளன.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவில் வைத்து இந்த தகவலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு தாம் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போது விடுதலைப்புலிகள் சென்னையில் காடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கொழும்பில் தாக்குதல்களை நடத்தவிருந்ததாக ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் தமிழகத்தில் 2009ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை தலைவர்களில் ஒருவரான டிஆர் பாலு இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி போரின் போது சென்னை விமான நிலையம்

   
       
   
  கியூ பிரிவு காவல்துறையினரின் முழு பாதுகாப்பில் இருந்தது.

எனவே விடுதலைப்புலிகள் அங்கிருந்து தாக்குதல்களை நடத்த வாய்ப்பிருக்கவில்லை என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கேர்னல் ஆர்.ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான ஆய்வாளர் சூரியநாராயனாவும் இந்த கருத்துக்கு இணையான கருத்தை வெளியிட்டுள்ளார்.

பேரழிவு பூகம்பம் சுவிஸில் எந்த நேரத்திலும் ஏற்படலாம்,



சுவிட்சர்லாந்து நாட்டின் பூகோள அமைப்பின் அடிப்படையில் எந்த நேரத்திலும் பேரழிவு உண்டாக்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவிஸின் நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில்

   
       
   
  சுவிட்சர்லாந்து நாடு பேரழிவு பூகம்பம் எந்த நேரத்திலும் எதிர்நோக்கியுள்ள நாடு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸின் பூகோள அமைப்பை 2004ம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தற்போது ஒரு புதிய ‘நில அதிர்வு அபாயத்திற்குரிய’ பகுதிகளின் வரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில், சுவிஸின் வாலைஸ்(Valais) மண்டலம் தான் அதிகளவில் நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக பேசல், Graubunden, St. Gallen Rhine பள்ளத்தாக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகள் நிலநடுக்கத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய வரைப்படத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருப்பது நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும்.

கருஞ்சிகப்பாக உள்ள பகுதியில் அதிக பாதிப்புகள் ஏற்படும். லேசான பச்சை நிறத்தில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மைய அதிகாரியான ஸ்டீபன் வைமெர், சுவிஸில் எந்த நேரத்திலும் அல்லது சில வருடங்களுக்கும் பிறகும் கூட மிதமான அல்லது கடுமையான அல்லது மிக பேரழிவை உண்டாக்கும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுவிஸ் நாட்டில் ஆண்டுக்கு 500 முதல் 800 முறைகள் நில அதிர்வுகள் ஏற்படுகிறது.

உதாரணமாக, பேசில் மண்டலத்தில் 6.6 ரிக்டல் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், 1,000 முதல் 6,000 பேர் வரை உயிரிழப்பும், 45,000 பேர் வரை பலத்த காயமடையும் நிலையும், 1.6 மில்லியன் மக்கள் வீடு இழக்க நேரிடும் நிலையும், 50 முதல் 140 பில்லியன் பிராங்க் மதிப்பில் மிக மோசமான சேதாரமும் ஏற்படும் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

எனினும்,

   
       
   
  உடனடியாக பேரழிவு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான எந்தவித உறுதியான ஆதரங்களும் ஆராய்ச்சியாளர்களிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மிதமான நில அதிர்வு அல்லது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டால், பொதுமக்கள் http://www.seismo.ethz.ch என்ற இணையத்தளத்தில் ஒவ்வொரு பகுதிகளின் சேதாரத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.


இலங்கை மக்களுக்கு அவரச அறிவிப்பு!


இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கைகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம்

   
       
   
  தெரிவித்துள்ளது.

சுனாமி ஆபத்துக்கள் உள்ளதாக பரவும் கட்டுக்கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடல் பிரதேசத்தில் வாழும் மக்கள் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனாமி ஆபத்துக்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை

   
       
   
  விடுக்கப்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 380 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Saturday, September 29, 2018

ஏ9 வீதி நீரில் மூழ்கியுள்ளது! 350 க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளத்தில் மூழ்கியது..


மலையக பிதேசங்களில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக அக்ரகுணை பிரதேசத்தில் ஏ9 வீதி

   
       
   
  சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அக்குரணை 6 ஆம் கட்டை பிரதேசம் முதல் ஏழாம் கட்டை பிரதேசம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதில் சுமார் 350 க்கும் அதிகமான வியாபார நிலையங்களும் வீடுகளும் நீரிழ் பகுதியளவு மூழ்கி பாதிக்கப்பட்டதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொலன்னறுவையில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த பஸ்

   
       
   
  வண்டி ஒன்று வெள்ளத்தில் சிக்கியதையடுத்து பிரதேச மக்கள் கடும் முயற்சிக்கு மத்தியில் அதில் பயணித்த பிரயாணிகள் காப்பாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தினமும் தோப்புக்கரணம் போடுங்கள் நண்பர்களே !



தினமும் 10 தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
   
       
   
  தினமும் 10 தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இப்பொழுது காண்போம் நண்பர்களே.

நம் முன்னோர்கள் காலத்து முதலே தோப்புக்கரணம் போடுவது வழக்கமாக இருந்துவந்தது. பொதுவாக பிள்ளையார் கோவிலுக்கு செல்லும்போது நாம் தோப்புக்கரணம் போடுவது வழக்கமான ஒன்று.

தோப்புக்கரணம் செய்வதால்,,

1. நினைவாற்றல் அதிகரிக்கும்

தொடர்ச்சியாக தினமும் 10 தோப்புக்கரணம் செய்து வந்தால் உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தினமும் தோப்புக்கரணம் செய்தால் உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் நீங்கி உங்களை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் நண்பர்களே.

2. வலிமையான கால்கள்

நமது உடலை தாங்கி நம்மை இங்கு அங்கு கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிப்பது கால்கள் ஆகும்.தினமும் தோப்புக்கரணம் செய்தால் உங்களின் கால்களின் வலிமை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு வலிமையான கால்களை அளிக்கும். எனவே வலிமையான கால்களை பெற தினமும் தோப்புக்கரணம் செய்யவேண்டும்.

3. வலிமையான இடுப்பு

தினமும் தோப்புக்கரணம் செய்து வந்தால் உங்களின் இடுப்பு எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.உங்களின் இடுப்பு எலும்புகளை இது மேலும் வலுவடைய செய்யும்.எனவே தினமும் 10 தோப்புக்கரணம் செய்துவாருங்கள் நண்பர்களே.

   
       
   
  4. ஆரோக்கியமான முதுகெலும்பு

தினமும் தோப்புக்கரணம் செய்தால் உங்களுக்கு ஆரோக்கியமான முதுகெலும்பு கிடைக்கும். மேலும் இது உங்களுக்கு முதுகு வலி வராமல் காக்கும். "முதுகு வலி உள்ளவர்கள் தினமும் தோப்புக்கரணம் செய்து வந்தால் உங்களுக்கு வலிமையான முதுகெலும்பு கிடைக்கும்.

5.மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும்


தினமும் தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும்.மேலும் இது உங்களின் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் இது உதவுகின்றது.எனவே தினமும் தோப்புக்கரணம் போடுங்கள்.
#ஸ்ரீஆன்மீகம் #தோப்புக்கரணம்

புதிய முன்னணியில் போட்டியிடவுள்ள விக்னேஸ்வரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில்,

   
       
   
  புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில்,

“எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன்.

முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை.

எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன்.

எமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர்,

   
       
   
  அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புதிய கூட்டணியை அமைப்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவரிடம் இருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மரணத்தில் முடிந்த முச்சக்கர வண்டி சாரதிகளின் வாக்குவாதம்..


தெஹிவளை கொஹூவல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின்

   
       
   
  அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுகேகொடை பிரதேசத்தில் இருந்து கொஹூவல நோக்கி வந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்தி செயல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு வண்டிகளின் சாரதிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான முச்சக்கர வண்டி சாரதி, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட மற்றைய சாரதியை கொஹூவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

   
       
   
 

திருகோணமலையில் கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த குருக்குள்! உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு


திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றின் சிறப்பு அமர்வு உறுதி செய்தது.புதன்கிழமை இடம்பெற்ற உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து தெரியவருவதாவது, 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாதசுந்தரம்பிள்ளை புவனேஸ்வரியை, சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து, ஆலய வளாகத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்திருந்தார்.

இந்த கொலைக்கு ஆலய பூசைகளில் உதவியாளராக பணியாற்றிய வெங்கட்ராமன் பாலமுரளி சர்மா உதவியாக இருந்துள்ளார்.

இவர் கொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

இதனையடுத்து ஆலய பிரதேசத்துக்கு சென்ற பொலிஸார் எதிரி வசித்து வந்த விடுதி வளவில் புதைக்கப்பட்டிருந்த

   
       
   
  அம்பிகாவின் எலும்புக் கூட்டை கைப்பற்றியிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா மீது குற்றயவில் தண்டனைக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியும் முக்கிய சாட்சியான பாலமுரளி சர்மாவும் தலைமறைவாகியிருந்தனர். அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக எதிரி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்ற போது, நீதிபதி இளஞ்செழியனின் விசேட உத்தரவின் பேரில், விமானத்தில் ஏறும் போது கைது செய்யப்பட்டார்.

முக்கிய சாட்சியான பாலமுரளி சர்மாவும் சரணடைந்திருந்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்றது.

இதில், அரச தரப்பில் சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமியும் எதிரியின் சார்பில் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தாவும் முன்னிலையாகி இருந்தனர்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று 2009ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறிக்கப்பட்ட எதிரி பிராமணக் குல குருக்கள், அவர் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலமான திருகோணேஸ்வர பிரதம குருக்களாக இருந்த சமயம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட அம்பிகாவின் சடலம் புண்ணிய தலமான கோயில் வளாகத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டு சுமார் ஒருவருடம் இரண்டு மாதகாலமாக அதே கோணேஸ்வர ஆலயத்தில் ஈஸ்வரனுக்கும் மாதுமைக்கும் குருதிக் கறை படிந்த கரங்களால் பூஜைகள் செய்து மக்களுக்கு அர்ச்சனை வழங்கியதன் விளைவாக கோயிலின் புனிதத் தன்மை எதிரியினால் கெடுக்கப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்ட சடலத்தின் புதைகுழியிலிருந்து கைப்பற்றப்பட்ட கழுத்து நெரிக்கப்பட்டமைக்கான கயிறு, தாலிக் கொடி, தலை மயிர், மண்டை ஓடு என்பன சான்றுப்பொருட்களாக அமைகின்றன.

அத்துடன் எதிரியினால் அம்பிகா புதைக்கப்பட்ட இடம் மான் இறந்து புதைக்கப்பட்ட இடமாகும். இதன் மூலம் எதிரி ஏமாற்று செய்யும் நோக்குடன் நடந்துள்ளார்.

“கோணேஸ்வரர் பெருமாளின் அருள் பெற வந்த மக்களுக்கு குருதிக் கறை படிந்த கரங்களால் அர்ச்சனை செய்துள்ளார். மாமன்னன் இராவணனால் பூசிக்கப்பட்ட ஆலயத்தின் புனிதத் தன்மை எதிரியால் கெடுக்கப்பட்டுள்ளது. எதிரி இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செய்தபோது, இருவரது சத்தத்துக்கும் இடையில் தூக்கத்திலிருந்த 1 வயதுக் குழந்தை எழுந்துள்ளது.

அக்குழந்தை முன்னால் இக்கொலை இடம்பெற்றுள்ளது. புதைகுழியைத் தோண்டியமை, சடலத்தைப் புதைத்தமை முதலான குற்றங்களின் பிரகாரம் எதிரி கொலையாளி என்பது நிரூபணமாகிறது. எனவே மன்று எதிரிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறது ” என்று நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்தத்

   
       
   
  தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் பி.குமாரரட்ணம், எதிரிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நியாயமானதே என்று வாதிட்டார்.

இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றம் எதிரிக்கு வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி, எதிரியின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தது.

இலங்கை சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் ஒருவருக்கு 2 மேன்முறையீட்டு உரிமை உண்டு என்ற அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கும் ஆட்சேபனை தெரிவித்து சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா, உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர ஜே.டி அப்ரூவ், விஜித் குமார மலால்கொட, முருடு பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் பி.குமாரரட்ணம் முன்னிலையாகி எதிரிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை சரியானதே என வாதித்தார்.

இந்த நிலையில் புதன்கிழமை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, எதிரியின் 2ஆவது மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, அவருக்கு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது.

இலங்கையின் முக்கிய நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!


மலையகத்தில் தொடரும் மழைகாரணமாக இன்று பிற்பகல் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டியின் தபால் நிலையத்தில் இருந்து அட்டனுக்கு செல்லும் பிரதான வீதி

   
       
   
  வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் அட்டன் நாவலபிட்டி மற்றும் நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை தாமதமானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மழை வெள்ளத்தின் காரணமாக நாவலப்பிட்டி வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் நகர பகுதியில் உள்ள கால்வாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

   
       
   
 

வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதிகளுக்கு அராசங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நிதியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது தொடர்பான தகல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற வாகன இறக்குமதி சலுகை பத்திரங்கள் இன்று நள்ளிரவு

   
       
   
  முதல் ஒருவருட காலத்திற்கு நிறுத்திவைக்கப்படுகின்றன.

அத்துடன், அரச திணைக்களங்கள், அமைச்சுக்கள், மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்காக இறக்குமதி செய்யவிருந்த, வாகனங்களை மறுஅறிவித்தல் வரை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை பத்திரங்களை பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை 6 மாதகாலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த வாகனங்களுக்கான கடன் உறுதி கடிதம் வழங்கும் நடவடிக்கையும் இடம்பெறாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய தீர்மானத்திற்கு அமைய ஹைபிரிட் எனும் கலப்பு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பெறுகையின் போது,

   
       
   
  அதன் பெறுமதியில் 70 சதவீத கடன் வழங்கல் விகிதம் தற்போது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வாகனங்களின் விலைபெறுமதியில் 50% முன்வைப்பு பணமாக வழங்கப்பட்டு எஞ்சிய தொகையே கடன் அடிப்படையில் மற்றப்பட வேண்டும்.

பேருந்து, பாரவூர்தி மற்றும் காவு வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் கடன் உறுதிப்பத்திரம் திறக்கப்படுகின்ற போது 200 சதவீத உச்சபட்ச வைப்பு செய்யபடவேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், திறன்பேசிகள், குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சி, வாசனை பூச்சிக்கள், சலவை இயந்திரம், காலணிகள் மற்றும் வாகன டயர் போன்றவற்றின் இறக்குமதிக்கு 100 சதவீத உச்சபட்ச வைப்பொன்று செய்யப்படவேண்டும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் பல அடி உயரத்திற்கு எழுந்த அலைகள்! சுனாமி பாதிப்பு குறித்து தகவல்


நேற்று இந்தோனேசிஷியாவில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள், இலங்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வளிமண்டலியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

எனினும் பாணந்துறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக காலி மற்றும் மாத்தறை கரையை அண்மித்த கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும். எனினும் அலைகள் கரையை அண்மித்த பிரதேசங்களுக்குள் பிரவேசிக்காது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது

   
       
   
  மலையகப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமி பேரலைகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசிஷியாவில் சுனாமியால் கொத்து கொத்தாய் பலியான மக்கள்! இலங்கைக்கு பாதிப்பா?


இந்தோனேசிஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் இதுவரை 384 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த சுனாமி இலங்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இன்று மாலை வரை பாணந்துறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக காலி மற்றும் மாத்தறை கரையை

   
       
   
  அண்மித்த கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும்.

எனினும் அலைகள் கரையை அண்மித்த பிரதேசங்களுக்குள் பிரவேசிக்காது என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வளிமண்டலியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இவ் விடயம் தொடர்பாக தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

"தற்போது பெரும்பாலான மலையகப்பகுதிகளில் காணப்படும் மழையுடனான காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும். அதன்படி மத்திய வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை தொடரும். மேல் மற்றும் தென் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் தென் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். எனவே குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தழிப்புடன் காணப்படும். எனினும் அண்மித்த பிரதேசங்களுக்கு பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது.

கடற்பிராந்தியங்களில் புத்தளம் தொடக்கம் பொத்துவில் ஊடாக கொழும்பு, காலி மற்றும் ஆகிய பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இதன் போது தென் மேற்காக வீசும்

   
       
   
  காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோ மீற்றரராக காணப்படும்.

அதிகமாக இரவு வேளைகளிலேயே இம் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இடி, மின்னல்களிலிருந்து ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்" என்றார்.





Friday, September 28, 2018

இலங்கைக்கும் சுனாமியா...?? வீதி வரை வந்து ஆர்ப்பரிக்கும் பாரிய அலைகள்.....!!


இலங்கையின் தெற்கே காலி கொழும்பு
   
       
   
 
   
       
   
  பிரதான வீதியில் அகுன தொடக்கம் தொடகமுவ வரை கடல் அலைகள் வீதிவரை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு தொடக்கம் இவ்வாறு அலை வீதிவரை வந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் நேற்றிரவு 7.5 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்தநில நடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி தாக்குதல் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டும் பலர் காணாமல் போயும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதநாயகியை நாள் முழுவதும் அடைத்து வைத்து தாக்கினார்; அறையில் பூட்டி வைத்தார்: செந்தூரன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு!


போதநாயகியை ஏமாற்றியே செந்தூரன் திருமணம் செய்தார், திருமணத்திற்கு முன்னரே செந்தூரனால் தாக்கப்பட்டு போதநாயகி மயக்கமடைந்திருந்தார்“ இப்படி அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார் போதநாயகியின் தாயார்.

வவுனியாவை சேர்ந்த போதநாயகி நடராஜா கிழக்கு பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். செந்தூரன் என்ற நபரை திருமணம் செய்திருந்த நிலையில், போதநாயகி அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது மரணத்திற்கு நீதிகேட்டு, நேற்று கிழக்கு பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே, போதநாயகியின் தாயாரான கமலா நடராஜா இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- “அவர் திருமணத்திற்காக தந்த சாதக குறிப்பும் போலியானது. ஏமாற்றித்தான் திருமணம் செய்தார் என்பதை பின்னர்தான் அறிந்தோம்.

திருமணத்திற்கு முன்னர் கூரைச்சேலை வாங்க வவுனியா நகரத்திற்கு சென்றிருந்தோம்.

   
       
   
  அங்கு வந்த செந்தூரன் போதநாயகியை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கூட்டிச் சென்றார். நாங்கள் வருவதற்கு முன்னரே- போதநாயகியின் வயதான தந்தையின் முன்னால், அவரை கடுமையாக தாக்கினார்.

முகம் முழுக்க இரத்த காயம். போதநாயகி மயங்கி விழுந்து விட்டார். அப்படியே செந்தூரன் விட்டுவிட்டு போய்விட்டார். நாங்கள்தான் அவரை தூக்கி மயக்கம் தெளிவிக்க வைத்தோம்.

திருமணத்தின் பின்னரும் போதநாயகியை பலமுறை தாக்கியிருக்கிறார். வெளியிடத்தில் அறைக்கு கூட்டிச் சென்று தாக்கினார். ஒருமுறை தாக்கிவிட்டு முழுநாளும் அறைக்குள் பூட்டி வைத்திருந்தார். மது போதையிலும் வந்து தாக்கினார்.

அவர் இன்னொரு திருமணம் முடித்த விசயத்தை மகள் பகிரங்கமாக எம்மிடம் சொல்லவில்லை. ஆனால் ஊரில் கதை வந்து விட்டது. போனமாதம் இதை நாங்கள் கேட்டோம். எம்முடன் கடுமையாக சண்டை பிடித்தார். பிறகு மகளை காரில் ஏற்றிக் கொண்டு அவர்களது வீட்டுக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு மகளை எங்கள் வீட்டிற்கு அனுப்பவேயில்லை.

வெள்ளிக்கிழமை கிளினிகிற்காக வருவதாக எனக்கு தொலைபேசியில் சொல்லியிருந்தார். வியாழக்கிழமை வருவார் என நான் சாப்பாடு எல்லாம் தயார் செய்திருந்தேன். ஆனால் அவர் சடலமாகத்தான் வீட்டிற்கு வந்தார்.

திருமணத்தின் முன்னரும் அவர் பல விடயங்களில் எம்மை ஏமாற்றி விட்டார். வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கி கொடுத்தார் போதநாயகி.

   
       
   
  அதைவிட பத்து இலட்சம் காசு கொடுத்திருக்கிறார். எமக்கு தெரிந்தது இது. இதைவிட இன்னும் காசு கொடுத்திருக்கிறார். இப்படியெல்லாம் செய்தும், போதநாயகியை அவர் ஏமாற்றி விட்டார்.

போதநாயகியின் இறுதிச்சடங்கிற்கும் அவர் வரவில்லை. எமது மகள் தற்கொலை செய்பவர் அல்ல. செந்தூரனால்தான் அவர் மரணமானார். அதை நான் உறுதியாக சொல்வேன். இந்த மரணத்திற்கு காரணம் செந்தூரன்தான்.

போநாயகி இறந்து விட்டார் என்றதும் செந்தூரனிற்கு எந்த பதட்டமும் இருக்கவில்லை. சடலத்தை பொறுப்பேற்க வந்தபோது, நன்றாக உடுத்திக் கொண்டு வந்திருந்தார். சடலத்தை பொறுப்பேற்கவும் இல்லை. பார்த்து விட்டு போய் விட்டார். நாங்கள்தான் சடலத்தை கொண்டு வந்தோம்.“ என்றார்.

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி தற்கொலை அல்ல!! அம்பலமானது திடுக்கிடும் ஆதாரம்..


திருமணம் முதல் அவர்களது குடும்பத்தில் பிரச்சினை இருந்தது - தற்கொலையாயின் நிரூபிக்கவும் பெண் விரிவுரையாளரின் தாயார்

உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின்,

   
       
   
  மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் டாக்டர் வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? ஆல்லது கொலை செய்யப்பட்டாரா? ஏன்பது கண்டறிந்து ஒரு முடிவு தெரிய வேண்டும். 

ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார்.?என்பது கண்டறியப்பட வேண்டும். 

அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார்,

பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல

   
       
   
  கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.

இவர் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்கு கூட வரவில்லை என்றார்.

கிழக்குப் பல்கலைக் கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்திலிருந்து பிரதான வாயில் வரை ஊர்வலமாக வந்த இப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் திடீரென்று பாம்பாக மாறிய மாட்டுச் சாணம்! அதிகாலையில் நடந்த பரபரப்பு!!


மாட்டுத் தொழுவமொன்றில் காணப்பட்ட மாட்டுச் சாணம் திடீரென்று

   
       
   
  பாம்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோட்டைக்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உண்மையில் மாட்டுச் சாணம் பாம்பாக மாறியதா என்பது தொடர்பில் குறித்த விவசாயியிடம் நாம் வினவினோம். அதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

“காலையில் வன்னிக்குச் செல்வதற்காக வழமையைவிட நேரத்திற்கே எழுந்து மாட்டுக் கொட்டிலை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டேன். கங்கு மடையால் சாணத்தை அள்ளி எருக் கிடங்கில் போடுவது வழமை. இவ்வாறு ஒரு சாணக் குவியலை அள்ளியபோது அது திடீரென்று பாம்பாக நெளிவதைக் கண்டு கீழே போட்டுவிட்டேன். நல்ல நேரம் அந்த பாம்பு புடையன் இனத்தைச் சேர்ந்தது.

   
       
   
  கங்கு மட்டையால் எடுத்ததனால் அது தீண்டுவதிலிருந்து தப்பிவிட்டேன்.” என்றார்.

குறித்த பாம்பு சுருண்ட நிலையில் அசைவின்றிப் படுத்ததனாலும் அவசர அவசரமாக வேலை செய்ததனாலும் அதனை சரியாக இனங்காணமுடியாமற்போனதாக அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவை தாக்கியது சுனாமி: சுலவேசி தீவில் 6.6 அடி உயர அலைகள்!வீடியோ!


7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் கடலோர நகரை

   
       
   
  சுனாமி தாக்கியது என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்தோனேசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.



ஐந்து பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த மரணங்கள் சுனாமியால் நிகழ்ந்தவையா

   
       
   
  என்ற தெளிவு இல்லை.

கடந்த மாதம் இந்தோனேசியாவின் லாம்போக் தீவை தொடர் நிலநடுக்கங்கள் தாக்கின. இவற்றில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவற்றில் மிகப் பெரியதான நிலநடுக்கம் ஆகஸ்ட் 5-ம் தேதி நிகழ்ந்தது. இதில் மட்டும் 460 பேர் கொல்லப்பட்டனர்.

2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு மிகப் பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட மிக மோசமான சுனாமியால் இந்தியப் பெருங்கடலில் 2.26 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 1.2 லட்சம் பேருக்கு மேல் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள்.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job