நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 27, 2018

யாழில் இருந்து சென்ற ரயிலில் திடீரென ஏற்பட்ட நிலை! பயணிகளை வியக்க வைத்த இளைஞன்


கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநடுவே நின்ற

   
       
   
  ரயில் ஒன்றை மாணவர் ஒருவர் சீர்செய்து மீண்டும் அதனை இயக்க உதவிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.குறித்த தொடரூந்து செப்டம்பர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்தது.

இந்நிலையில் மஹகல்கடவல பிரதேசத்தில் தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகி இடைநடுவே நின்றுள்ளது. வனப்பகுதிக்கு இடையே திடீரென நின்றுள்ள ரயில் சீர்செய்வதற்காக தொழில்நுட்பவியலாளர் 45 நிமிடங்கள் போராடியும் அது பலனளிக்கவில்லை.

பின்னர் அந்த இடத்திற்கு வந்த மாணவர், தொழிநுட்ப கோளாரை சீர்செய்வதற்கு தன்னிச்சையாக முன்வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு அதிகாரிகளுடன் பயணிகள் மற்றும் ரயில் சாரதியும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த

   
       
   
  மாணவர் 20 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாரை சரிசெய்து மீண்டும் ரயில் இயந்திரத்தை இயக்க உதவியுள்ளார்.

இவ்வாறு உரிய நேரத்தில் தான் அறிந்த விடயத்தை பயன்படுத்தி பல பயணிகள் முகம் கொடுத்திருந்த அசௌகரியத்தை நீக்க பெரிதும் உதவியுள்ளவர் ஜனித் தீமந்த என்ற தொழில்நுட்ப மாணவர் ஆகும்.இந்த சந்தர்ப்பத்தின் போது பயணி ஒருவரால் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.

0 comments:

Post a Comment