நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, September 4, 2018

திடீரென தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட இளம்பெண்...அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

 
   
       
   
 


பக்கத்து வீட்டார் தனது தந்தையும், தன்னையும் தாக்கியதால் கோபம் அடைந்த குறித்த இளம்பெண் தனக்கு தானே தீ வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் இந்தியாவிலுள்ள தருமபுரி மாவட்டம் சோகத்தூர் அருகே நடந்துள்ளது.

சோகத்தூரை அடுத்துள்ள ஏ.ரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். அவருக்கு லதா என்ற மனைவியும் வித்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

வித்யாஸ்ரீ அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் மாதையனுக்கும், அவரது வீட்டிற்கு அருகே உள்ள ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் ஒரு அடி நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நடந்த தகராறில் ராஜேந்திரனின் மகன் நிர்மல்குமார், வித்யாஸ்ரீயையும், மாதையனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து மாதையன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். ஆனால் வழக்குப்பதிவு செய்யாத பொலிஸார் இருதரப்பினரையும் அழைத்துப்பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனால் நிர்மல்குமார் தாக்கியதால் மனவேதனையில் இருந்த வித்யாஸ்ரீ, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம், உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை வித்யாஸ்ரீ உயிரிழந்தார்.

இதுகுறித்து தருமபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job