நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 6, 2018

முதலமைச்சருடன் இணையும் நான்கு தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள்: யாழில் நடந்த இரகசிய சந்திப்பு!





வடமாகாணசபையின் உறுப்பினர்கள் எட்டுப் பேர் மிக இரகசியமாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து, அவரது கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளனர். இதில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட நான்கு தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளடங்குகிறார்கள்.

கடந்த 31ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. இதன்பின்னர் திருநெல்வேலியிலுள்ள வீடொன்றில் மிகமிக இரகசியமாக இந்த சந்திப்பு நடந்தது.

   
       
   
 

ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் கட்சிகளை சேர்ந்த தலா ஒவ்வொரு உறுப்பினர்களும், அடையாளத்தை தெரிவிக்க விரும்பாத இன்னொரு உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் நான்கு உறுப்பினர்களுமாக எட்டு மாகாணசபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழரசுக்கட்சியின் முக்கிய மாகாணசபை உறுப்பினர்களான அவர்கள் இதுவரை முதலமைச்சர் எதிர்ப்பு அணியில் அடையாளப்படுத்தப்பட்டு வந்தவர்கள். முதலமைச்சரை சந்திக்கவும், அவரின் அணியில் இணையவும்- முதலமைச்சர் அணியை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஊடாக நடத்திய பேச்சை தொடர்ந்தே இந்த சந்திப்பு நடந்தது.

அரசியல் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அண்மைக்காலத்தில் எப்படியோ ஊடகங்களில் கசிவதையடுத்து இந்த சந்திப்பு மிக மிக இரகசியமாக- தகவல் வெளியில் கசியாத விதத்தில் அமைய வேண்டுமென, தமிழரசுக்கட்சி தரப்பு மாகாணசபை உறுப்பினர்கள் ஒரேயொரு நிபந்தனை விதித்திருந்தனர். இதையடுத்து, திருநெல்வேலியிலுள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டை சந்திப்பிற்கு தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர் ஒருவரே ஏற்பாடு செய்திருந்தார்.

முதலமைச்சரின் அணியில், கட்சியில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தன்போது அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தார்கள்.ஏற்கனவே முதலமைச்சரிற்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானத்தில் கையொப்பமிட்ட மற்றைய நால்வரும்- தமது கட்சிகள் எப்படி தீர்மானமெடுத்தாலும் முதலமைச்சருடன் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள்.

இதனபோது கருத்து தெரிவித்த முதலமைச்சர்-

   
       
   
  “கூட்டமைப்பிலிருந்து தான் வெளியேறினாலும், அங்கத்துவக்கட்சிகளை உடைத்து, கூட்டமைப்பை உடைக்க நான் விரும்பவில்லை. கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் இருந்து நீங்கள் வெளியேற விரும்பினால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு இரவில் அந்த முகாமிலிருந்து இந்த முகாமிற்கு வருவது சரியில்லை. நீங்கள் இருக்கும் கட்சிகளை விட்டு வெளியேற விரும்பினால், ஏன் அங்கிருந்து வெளியேறுகிறீர்கள் என்பதை முதலில் வெளிப்படையாக மக்கள் முன் சொல்லுங்கள். அதன்பின்னர் இங்கு தாராளமாக வாருங்கள். உங்களிற்கான கதவு திறந்திருக்கிறது“ என முதலமைச்சர் பதிலளித்துள்ளதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

இந்த சந்திப்பு அதிகபட்ச சினேகபூர்வமானதாக இருந்ததையும் அறிய முடிந்துள்ளது.

சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் முதலில் புறப்பட்டு சென்ற பின்னர், எட்டு மாகாணசபை உறுப்பினர்களிற்கும் அந்த மருத்துவரின் வீட்டிலேயே இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job