நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, October 14, 2024

15 வயது மகளை வன்பு ணர்வு செய்த தந்தைக்கு 19 வருட சிறைத்தண்டனை


15 வயது மகளை வன்பு ணர்வு செய்த தந்தைக்கு 19 வருட சிறைத்தண்டனை

தனது மகளையே வன்பு ணர்வு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஆனமடுவ, ஊரிய – அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவருக்கே மேல் நீதிமன்றம் குறித்த தண்டனையை அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு தனது 15 வயது மகளை வன்பு ணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரை குற்றவாளியாகக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2 இலட்சம் ரூபா அபராதம் செலுத்தாவிடின் சந்தேகநபருக்கு 6 மாத கடூழிய கடூழிய சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.

0 comments:

Post a Comment