நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 19, 2018

புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!!




தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ­ஜந்து. அவரை நான் அப்­ப­டித்­தான் பார்க்­கின்­றேன்.

இவ்­வாறு ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வுக்கு அண்­மை­யில் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, அங்­குள்ள தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் போக்கு மக்­க­ளை­யும் அழித்து தங்­க­ளை­யும் அழிக்­கும் நிலை­யையே உரு­வாக்­கும் என்று நான் எப்­போதோ கூறி­யி­ருந்­தேன். அது போலவே நடந்­தது. என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

ஆனால் அர­சி­யல் உள்­நோக்­கத்­து­டன் அவர் உயி­ரு­டன் இருக்­கின்­றார் என்று கருத்­துக்­கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ ஜந்து என்றே நான் அவ­ரைப் பார்க்­கின்­றேன். அவர் மக்­க­ளுக்­காக போரா­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால் என்ன நடந்து முடிந்­துள்­ளது.

இந்­தி­யப் படையை தாக்கி விரட்­டி­ய­டித்த போது உல­கத்­தில் நான்­கா­வது இடத்­தில் இருந்த படையை விரட்டி விட்­டோம் என்று கூறி­யி­ருந்­த­னர். ஆனால் உல­கில் 35 ஆவது இடத்­தில் உள்ள இலங்கை இரா­ணு­வத்தை வெல்ல முடி­ய­வில்லை. அவர்­கள் விவே­க­மாக செயற்­ப­ட­வில்லை. அத­னால் ஏரா­ள­மான உயி­ரி­ழப்­புக்­கள் இடம்­பெற்­றன. இது மட்­டு­மல்­லாது எனது சகோ­த­ரர், உற­வி­னர்­கள் கடத்­தப்­பட்­ட­னர்.

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தை நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்தி இருக்­க­லாம். போரால் இருப்­ப­தை­யும் இழந்து உள்­ளோம்.என்­னைக் கூட பல தட­வை­கள் கொல்ல முயற்­சித்­தும் புலி­க­ளால் முடி­ய­வில்லை. தமிழ் மக்­கள் இப்­போது எல்­லா­வற்­றை­யும் இழந்து உள்­ள­னர்.

புதிய அரசு உரு­வாகி ஒரு வரு­டத்­தில் முக்­கிய தீர்­வு­கள் கிடைக்­க­விட்­டால் பின்­னர் கிடைக்­காது. அது ஆறிய கஞ்சி பழங் கஞ்சி ஆகி­வி­டும்.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் சர­ண­டைந்­தார் என்றே கூறப்­ப­டு­கின்­றது. இந்த நேரத்­தில் ஆதா­ர­பூர்­வ­மாக நான் கூற­வி­ரும்­ப­வில்லை. போரில் சர­ண­டைந்­தால் யார் என்­றா­லும் மனித நேயத்­து­டன் நடத்தி இருக்க வேண்­டும். புலி­க­ளும் அரச படை­யும் அவ்­வாறு நடக்­க­வில்லை. விடு­த­லைப் புலி­க­ளின் தலைமை இப்­போது முற்­றாக இல்லை – என்­றார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job