நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, November 9, 2023

மாணவன் ஒருவரை புலமைபரிசில் எழுதவிடாமல் தடுத்த பாடசாலை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு



முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் ஒருவரை புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகத்தின்மீது குறித்த மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவனை புலமை பரிசில் பரீட்சை எழுதவிடாது பாடசாலை நிர்வாகம் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தை சேர்ந்த தரம் 5 இல் கல்விகற்ற மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார் படுத்தியுள்ளார்கள்.



இதன்போது குறித்த மாணவனக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை.

ஆனால் அதற்கான மருத்துவ அறிக்கையினையும் பெற்றோர்கள் பாடசாலையில் காட்டியுள்ளார்கள். இந்த நிலையில் புலமைபரிசில் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருங்கி வந்த வேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து குறித்த மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 Scholarship Exam School That Suspended The Student

இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர்கள் முறையிட்ட போது மாணவன் பரீட்சைகளில் 70 புள்ளிகளுக்கு கீழ் எடுக்கின்றார். இது போதாது புலமை பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாங்கியுள்ளனர். பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காகவும் படிப்பித்த ஆசிரியர் தான் படிப்பித்த பிள்ளைகள் அனைவரும் சித்தியடைந்துள்ளனர் என பெருமை பேசவும் உடல் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாணவன் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது பாடசாலை செல்வதற்கு விருப்பம் அற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர். பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது அவனை தடுப்பது என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும் இது தொடர்பில் கல்வி திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ, சிறுவர் உரிமை தொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job