நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, August 30, 2018

வடக்கில் அதிகமாக சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை வன்புனர்வுகுள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள் காரணம் என்ன?



வீரர்கள் பிறந்த  மண்ணில். அதுவும் வடக்கில் அதிகமாக துஷ்பிரயோகம் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அப்பாவி சிறுமிகள்,முதல் பெரியவர்கள் வரை.

தெரியாமல் தான் கேட்கிறேன். அறக்க குணம் படைத்த மிருகங்களே! நீங்கள் பிறந்த அதே மண்ணில் தானேடா அந்த மாமனிதரும் இத்தனை ஆயிரம் மா வீர மங்கைகளும் மா.வீரர்களும் பிறந்தவர்கள். 

அப்படியான கடும் யுத்த காலத்தில் ஏன் இப்படியான சம்பவங்கள் அரிதாகவே நடைபெற்றது.(பயம்) 

இப்போது மட்டும் பெண்களை நடத்தை கெட்டவள் அப்படிப்பட்டவள் இப்படி பட்டவள் என்று நீங்கள் தானே! தெரியாத ஆண்களையும் ஒரு தடவை குறித்த பெண்களை திரும்பி பார்க்க வைக்கிறீர்கள். இது மட்டும் நியாயமா? 

கண்ணியம், பெண்ணியம், என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். அப்படி இருக்கும் பெண்கள் தான் சிறந்த குலப் பெண்கள் என்று சொல்லி சொல்லியே போனால். பெண்களுக்கு நடக்கிறது. இப்படியான சம்பவங்களுக்கு. பெண்கள். முகம் கொடுக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். 

ஒரு போதும் பிறக்கும் போது கெட்டவர்களாக பிறப்பதில்லை.சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி அமைத்து விடுகிறது. அவர்களை நடத்தை கெட்டவளாக்குவது .யார்?? நமது சமூகம்.குறித்த பெண்கள் உங்கள் ஆசைகளுக்கு இனங்காவிட்டால் அவர்களின் புகைப்படங்களை முகநூலிலும் இணையத்திலும் பதிவிடவும் செய்கிறீர்கள். பாவப்பட்ட பெண்களை தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி நமது இனத்தையும் மறைமுகமாக ஒரு சிலர் அழிக்க முற்படுவது ஏனோ? 

இன்று.வடக்கில் அதிகமாக சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை வன்புனர்வுகுள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள் காரணம் என்ன? மது,போதைவஸ்த்து,(களியாட்டம்) என்பன அதிகமாக பாவனைக்கு வந்ததன் நிமிர்த்தமே ஒரு சில  சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை இவற்றில் மூழ்கி கிடக்கிறார்கள். 

அப்படி இவையெல்லாம் பாவிப்பவர்கள் பெற்ற தாய் தனது பெற்ற பிள்ளைகள். சகோதரிகளும் இவர்களுக்கு போகப் பொருளாகவே தெரிகிறது. 

வேறு ஒரு இனம் நமது இனத்தை
அழிக்க தேவையில்லை. நமது இனமே நமது இனத்தை அழித்துக் கொண்டு இருக்கிறது. 

நேற்று சிறுமி சிரேகா,ரெஜினா,வித்தியா இன்று இந்த பெண் நாளை யாரோ ???

பெண்களே வீரம் நிறைந்த மண்ணில் பிறந்த நாம் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை.புறப்பட்டு பொங்கி எழுந்து குரல் கொடுக்க வாருங்கள்....

பூலான் தேவியாக மாறுங்கள் யாருடைய அவச்சொல்லுக்கும் செவிமடுக்காமல் நீங்கள் நீங்களாக இருங்கள் .உங்களை நீங்கள் முதலில் நேசிக்கப் பழகுங்கள்.நமது சமூகத்திற்கு பயம் வேண்டும். ஒரு சில விடயத்தில் மட்டுமே!!!

பெண்ணே !! நீ ஒரு பூ என்பதாலும் வாய் பேசா மடந்தை என்பதாலுமே உன்னை மிதிக்க நினைக்கிறார்கள் நீ கடலாக, புயலாக மாறிவிடு😥😥😥😥

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job