நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 28, 2018

நள்ளிரவில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!



திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பூபாலன், வழக்கம்போல நேற்றைக்கும் கிளம்பி வேலைக்குச் சென்றுவிட, மனைவி நதியா மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளன. இதனைக் கண்ட பூபாலனின் சகோதரர் ஜீவா, அந்த வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, உள் அறைக்குள் நதியா கொடூரமாக கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நதியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், கொலை நடைபெற்ற வீட்டிலிருந்து பணம், நகை போன்றவை திருடப்படவில்லை என்ற தகவலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தற்போது நதியாவின் மரணம் குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job