நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 31, 2018

லசித் மலிங்காவின் சுவாரசிய காதல் கதை கசிந்தது




இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு மலிங்காவின் காதல் கதை குறித்து பார்ப்போம்.

இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனது அதிவேக பந்துவீச்சின் காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் தனது கிரிக்கெட் வாழ்க்கை ஒருபுறம் இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மீது அதிக அக்கறை கொண்டவர்.

எதனையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட காரணத்தினாலேயே இவரை மணமுடித்துள்ளார் தன்யா பெரேரா.

மிகவும் எளிமையான குணம் கொண்ட மலிங்காவின் காதல் கதை மிகவும் சுவாரசியம் நிறைந்தது. இவர் முதல் முறையாக தனது காதல் மனைவி தன்யாவை ஹொட்டல் ஒன்றில் வைத்து விளம்பர நிகழ்ச்சியின் போது சந்தித்துள்ளார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியின் மேலாளராக இருந்தவர் தன்யா. Hikkaduwa இல் உள்ள ஹொட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பே, இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைவதற்கு காரணமாக அமையும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை.

கண்டதும் காதல் என்பார்கள். ஆனால் இவர்கள் சந்திப்பில் இது நடக்கவில்லை. ஏனெனில், தன்யாவுக்கு அப்போது கிரிக்கெட் குறித்து அதிகமாக ஆர்வம் இல்லாத காரணத்தால் , மலிங்காவிடம் குறைவாக பேசியுள்ளார்.

இரண்டாவதாக, Galle இல் உள்ள ஹொட்டலில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, தங்களது தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டனர்.

அதன்பிறகு தினமும் தொலைபேசி மூலம் அதிக நேரம் பேசியுள்ளனர். கிரிக்கெட் விளையாடுவதற்காக லசித் மலிங்கா, வெளிநாடுகளுக்கு செல்கையில் இவர்கள் மனதால் பேசிக்கொண்ட நேரம் அதிகமானது.

ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில், தனது மனதுக்குள் மறைத்துவைத்திருந்த காதலை தன்யாவிடம் தெரியப்படுத்தியுள்ளார் மலிங்கா. ஆனால், இதற்கு தன்யா சொன்ன பதில், எனது பெற்றோரிடம் சம்மதம் வாங்குங்கள். அதன் பிறகு நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.





இதனைத்தொடர்ந்து, தன்யாவின் வீட்டிற்கு சென்ற மலிங்கா, அங்கு அவரது அம்மா மற்றும் சகோதரரை சந்தித்து பேசியுள்ளார். இருப்பினும் இந்த திருமணத்திற்கு தன்யாவின் தந்தை சம்மதம் முக்கியம் என்பதால், அமெரிக்காவில் இருந்த தன்யாவின் தந்தை வந்தவுடன் அவரையும் சந்தித்துள்ளார்.

தனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் எனது தந்தை, இதனால் எனது தந்தையின் சம்மதம் மிக முக்கியம், இதனால் அவரது ஆசிர்வாதத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் தன்யா.

அதன்படியே, இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் திகதி இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job