நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, November 7, 2023

ஒரு குழந்தைக்கு தந்தையான 17 வயதான மாணவன் யாழ் பிரபல பாடசாலையில் ஏ.எல் கற்கின்றார்!!


தனது வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் 20 வயதான யுவதியை கர்ப்பமாக்கி குழந்தை பெறச் செய்த 17 வயதான பிரபல பாடசாலை மாணவன் சயந்தன் (புனைபெயர்) தற்போதும் அதே கல்லுாரியில் கல்வி நடவடிக்கையை தொடர்ந்துள்ளார். யாழ் நகர்ப் பகுதிக்கு அண்மையில் அரச ஊழியர்களான தனது பெற்றோர் மற்றும் சகோதங்களுடன் வசிக்கும் குறித்த மாணவன் யாழ் நகரப் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். அவரது வீட்டுக்கு அருகில் அவரிலும் விட 3 வயது கூடிய பிரபல பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவி தமிழினியும் (புனைபெயர்) வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். இரு குடும்பமும் அந்நியோன்யமாக பழகி வந்ததாக தெரியவருகின்றது.

சயந்தனின் அக்கவும் தமிழினியும் ஒரே வயதானவர்கள் என்பதுடன் ஒரே பாடசாலையிலும் கற்றவர்கள். இதனால் அடிக்கடி சயந்தனின் அக்காவின் வீட்டுக்கு தமிழினி சென்று வருவது வழமை. இவ்வாறான நிலையிலேயே தமிழினி கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக தமிழினியை விசாரணை செய்த போது தன்னிலும் விட 3 வயது குறைந்த அந் நேரம் 16 வயதாக இருந்த சயந்தனே இதற்கு காரணம் என்பதை அறிந்து அதிர்ந்துள்ளார்கள். கர்ப்பத்தை கலைப்பதற்கு முயன்றும் 6 மாத கர்ப்பிணி என்பதால் வைத்தியர்கள் சம்மதிக்கவில்லை என தெரியவருகின்றது.

இதனால் இரு குடும்பத்திற்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. ஆனால் எதற்காக இரு குடும்பமும் திடீரென முரண்பட்டு சண்டை பிடிக்கின்றார்கள் என்பது தெரியாமல் அயலில் வசிப்பவர்கள் குழம்பியுள்ளார்கள். சில நாட்களின் பின்னர் தமிழினியும் அவளது தாயாரும் மாயமானார்கள். யாழ் நகர்பகுதியில் வர்த்தகராக உள்ள தமிழினியின் தந்தையும் மகனுமே வீட்டில் இருந்துள்ளார்கள். இது தொடர்பாக அயல்வீட்டார் கேட்ட போது வெளிநாட்டிலிருந்து வந்த தனது மனைவியின் உறவுகளுடன் கொழும்பில் மனைவியும் தமிழினியும் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதே வேளை சயந்தன் சைக்கிளில் சென்ற போது குறித்த வர்த்தகர் அவனை பிடித்து இழுத்துச் சென்று கடும் தாக்குதல் நடாத்தியதாகவும் இதனால் மீண்டும் இரு குடும்பத்திற்கும் சண்டை ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது. சயந்தனை எதற்காக வர்த்தகர் அடித்தார் என்பது தெரியாது அயலவர்கள் குழம்பியுள்ளார்கள்.

சயந்தனின் தந்தையின் நெருங்கிய உறவினர் கொக்குவில் பகுதியில் வசிக்கும் பிரபல சட்டத்தரணியாவார். அவர் தமிழினியின் தந்தையின் வீட்டுக்குச் சென்ற போது அங்கு இருவருக்கும் பெரும் வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது. இதனையடுத்தே தமிழினி கர்ப்பாக இருக்கும் விடயமும் அதற்கு காரணம் சயந்தனின் திருவிளையாடலும் என அயலவர்கள் அறிந்துள்ளார்கள். குறித்த சட்டத்தரணி தனது உறவினரின் மகனான குழந்தைப்பிள்ளை சயந்தனை உனது மகள் துஸ்பிரயோகம் செய்துவிட்டாள் என கூறி அவளை சிறையில் அடைக்க முடியும் என தமிழினியின் தந்தையை வீட்டில் வைத்து அச்சுறுத்தியதாகவும் தெரியவருகின்றது. அந்த அச்சுறுத்தலுடன் தமிழினியின் தந்தையான வர்த்தகர் அடக்கி வாசிக்க தொடங்கிவிட்டாராம். அதன் பின்னர் தனது மகளுக்கு ஏற்பட்ட நிலையை சொல்லி சட்டத்தரணியிடம் அழுதுள்ளர். இதன் பின்னர் இரு குடும்பத்தினருடனும் சட்டத்தரணி கலந்தாலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

சயந்தனுக்கு திருமண வயது வந்த பின்னர் தமிழினிக்கு திருமணம் முடித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த யூன் மாதம் தமிழினி அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குறித்த குழந்தைக்கு அப்பாவான 17 வயதுச் சிறுவன் தற்போதும் பாடசாலைக்கு சென்று வருவதாக அறிய முடிகின்றது. யாழ் நகரப்பகுதிக்கு அண்மையாக உள்ள குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் இவர் கற்றல் நடவடிக்கையை தொடர்ந்தவண்ணம் உள்ளார். இருப்பினும் குறித்த மாணவன் ஒரு குழந்தைக்கு தந்தை என்பதை அறியாது அவனது நண்பர்கள் தற்போதும் அவனது வீட்டுக்கு வந்து சென்றவண்ணம் உள்ளார்களாம்..

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job